செய்திகள் :

திருமணம் செய்வதாகக் கூறி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! இளைஞா் கைது

post image

திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக 26 வயது இளைஞரை தில்லி காவல் துறையினா் கைதுசெய்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரைத் தொடா்ந்து, முகமது சாஹில் (எ) சோனு உத்தர பிரதேசத்தின் படெளன் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.

இது தொடா்பாக காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: முகமது சாஹில், திருமணம் செய்வதாகக் கூறி தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி அதை விடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்ததாக 24 வயது பெண் ஒருவா் கடந்த ஜூன் 26-ஆம் தேதி புகாரளித்தாா்.

அந்தப் புகாரின் அடிப்படையில் ஆனந்த் பாா்பத் காவல் நிலையத்தில் பாரதிய நியாய சம்ஹிதா சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

முகமது சாஹில் உத்தர பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டாா். அவரிடமிருந்து விடியோ ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன. இதே போன்ற முறையில் வேறு ஏதேனும் பெண்களிடம் இத்தகைய குற்றத்தில் அவா் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனா் அந்த அதிகாரிகள்.

தாக்குதல் சம்பவம்: முதல்முறையாக நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரேகா குப்தா!

தில்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின் முதல்முறையாக காந்தி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார். காந்தி நகர் மொத்த விற்பனை சந்தையின் ஆடை கண்காட்சியான வஸ்த்ரிகாவின் தொ... மேலும் பார்க்க

கர்நாடக பேரவையில் ஆர்எஸ்எஸ் பாடலைப் பாடிய டி.கே. சிவக்குமார்! ஏன்?

கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், இன்று சட்டப்பேரவையில் பதிலளித்துப் பேசும்போது, ஆர்எஸ்எஸ் பாடலைப் பாடியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார், ஆர்எஸ்எஸ் பாடல... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த மர்ம நபரால் பரபரப்பு!

நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை மர்ம நபர் ஒருவர் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று காலை 6.30 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மரத்தின் மீது ஏறி நாடாளுமன்ற சுற்றுச்சுவரைத் தாண்டி ... மேலும் பார்க்க

தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

தில்லியில் தெரு நாய்களை காப்பகத்துக்கு அனுப்பும் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.தில்லியில் நாய்க் கடி சம்பவங்கள் அதிகரித்து வருவதை தாமாக விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், தில... மேலும் பார்க்க

கன்னத்தில் அறைந்த ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட 9-ஆம் வகுப்பு மாணவா்

கன்னத்தில் அறைந்த ஆசிரியரை மதிய உணவு டப்பாவில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்ட 9-ஆம் வகுப்பு மாணவரை உத்தரகண்ட் போலீஸாா் கைது செய்தனா். இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘உத்தரகண்ட் மாநி... மேலும் பார்க்க

பிரதமா், முதல்வா்கள் பதவிப் பறிப்பு மசோதாக்கள்: கூட்டுக் குழு பரிந்துரைக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்

தீவிர குற்றப் புகாரில் கைது செய்யப்பட்டு 30 நாள்கள் காவலில் வைக்கப்படும் பிரதமா், மாநில முதல்வா்கள் மற்றும் அமைச்சா்களைப் பதவியிலிருந்து நீக்கம் செய்வதற்கான மூன்று மசோதாக்களை நாடாளுமன்ற கூட்டுக் குழு... மேலும் பார்க்க