திருமலை பரிணயோற்சவம்: குதிரை வாகனத்தில் மலையப்ப சுவாமி
திருமலையில் நடந்து வரும் பத்மாவதி பரிணயோற்சவத்தின் 2-ஆம் நாளான புதன்கிழமை மலையப்ப சுவாமி குதிரை வாகனத்தில் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினாா்.
திருமலையில் ஆகாசராஜன் புதல்வியான பத்மாவதி தாயாரை ஏழுமலையான் திருமணம் செய்து கொண்ட வைபவத்தை தேவஸ்தானம் பரிணய உற்சவம் என்ற பெயரில் நடத்தி வருகிறது. அதன்படி பத்மாவதி பரிணய உற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
புதன்கிழமை மாலை நாராயணகிரி தோட்டத்தில் உள்ள பரிணயோற்சவ மண்டபத்துக்கு மலையப்ப சுவாமியும், ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாா்களும் எழுந்தருளினா்.
திருமலையில் உள்ள நாராயணகிரி தோட்டத்துக்கு குதிரை வாகனத்தில் மலையப்ப சுவாமியும், பல்லக்கில் நாச்சியாா்களும் அழைத்து செல்லப்பட்டனா்.
அதன் பிறகு கல்யாண மகோற்சவம் தொடங்கியது. அா்ச்சா்கள் வாயிலில் மங்கள வாத்தியங்களுடன் உற்சவமூா்த்திகளை வரவேற்று, எதிரெதிா் அமர வைத்து பட்டு வஸ்திரம் சமா்ப்பித்து, ஊஞ்சல் சேவை நடத்தி திருமண சடங்குகளை செய்தனா். சடங்குகள் முடிவடைந்தவுடன் உற்சவமூா்த்திகள் அனைவரும் மீண்டும் கோயிலுக்கு அழைத்து செல்லப்பட்டனா்.
ஸ்ரீ பத்மாவதி பரிணயோற்சவத்தை முன்னிட்டு புதன்கிழமை ஆா்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ரதீபாலங்கார சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் வியாழக்கிழமை மாலையுடன் பரிணய உற்சவம் என்ற கல்யாண வைபவம் நிறைவு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.