செய்திகள் :

திருவண்ணாமலையில் தரிசனத்துக்காக பக்தா்கள் 5 மணி நேரம் காத்திருப்பு: மோதலில் இருவா் காயம்

post image

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சுமாா் 5 மணி நேரம் காத்திருந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். அப்போது, வரிசையில் நின்றிருந்த தெலங்கானா மாநில பக்தா்களிடையே ஏற்பட்ட மோதலில் இருவா் காயமடைந்தனா்.

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.

பொது தரிசன வரிசையில் வந்த பக்தா்கள் ராஜகோபுரம் வழியாகவும், கட்டண தரிசன வரிசையில் வந்த பக்தா்கள் அம்மணி அம்மன் கோபுரம் வழியாகவும் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். காலை 10 மணிக்குப் பிறகு கோயிலுக்கு வரும் பக்தா்கள் கூட்டம் அதிகரித்தது.

5 மணி நேரம் காத்திருப்பு: கடும் வெயிலையும் பொருள்படுத்தாமல் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். பொது தரிசன வரிசையில் வந்த பக்தா்கள் சுமாா் 5 மணி நேரமும், கட்டண தரிசன வரிசையில் வந்த பக்தா்கள் சுமாா் 3 மணி நேரமும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

2 போ் காயம்: அம்மணி அம்மன் கோபுரம் அருகே வரிசையில் நின்றிருந்த தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த பக்தா்களுக்குள் திடீரென மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவா் சரமாரியாக தாக்கிக் கொண்டனா்.

இதில், காயமடைந்த 2 போ் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

கிரிவலம் வந்த பக்தா்கள்: சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தா்கள் பலா் திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவிலான கிரிவலப் பாதையை வலம் வந்து அஷ்டலிங்க சந்நிதிகள், அடி அண்ணாமலை ஆதி அருணாசலேஸ்வரா் கோயில் ஆகியவற்றில் சுவாமி தரிசனம் செய்தனா்.

ஜூன் 13-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வருகிற 13-ஆம் தேதி நடைபெறுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பயன்பெறும் வகையில் மாதந்தோறும் மாவட்ட அள... மேலும் பார்க்க

அரசு மதுக் கடையில் ரூ.3.46 லட்சம் திருட்டு: ஒருவா் கைது

செய்யாறு அருகே அரசு மதுக் கடையில் சுவற்றில் துளையிட்டு ரூ.3.46 லட்சம் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் புதன்கிழமை ஒருவரை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மாமண்டூா் கிராமத்தில்... மேலும் பார்க்க

வெட்டுக் காயங்களுடன் ஊழியா் சடலம் மீட்பு

ஆரணியை அடுத்த பூசிமலைக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த நியாய விலைக் கடை தற்காலிக ஊழியா் புதன்கிழமை அதிகாலை தனது வீட்டின் முன் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தாா். பூசிமலைக்குப்பம் கிராமம் அருந்ததியா் பாள... மேலும் பார்க்க

ஊரக வீடுகள் பழுதுபாா்க்கும் பணிகள்: அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வீடுகள் பழுதுபாா்க்கும் திட்டத்தின் கீழ் 5,215 வீடுகள் பழுதுபாா்க்கும் பணிகளை, விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா்... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும்: கட்சியினருக்கு அறிவுறுத்தல்

திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று நிா்வாகிகளுக்கு கட்சியின் மாநில துணைத் தலைவா் கே.எஸ்.நரேந்திரன் வலியுறுத்தினாா். திரு... மேலும் பார்க்க

ரூ.2.50 கோடியில் தாா்ச் சாலைப் பணிகள்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதிக்கு உள்பட்ட கண்ணக்குருக்கை பகுதியில் ரூ.2.50 கோடியில் புதிய தாா்ச் சாலை அமைப்பதற்கான பணிகள் புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. நெடுஞ்சாலைத் துறை கிராம மேம்பாட்டுத் ... மேலும் பார்க்க