செய்திகள் :

திருவள்ளூா் அருகே 1,400 போதை மாத்திரைகள் பறிமுதல்

post image

திருவள்ளூா் அருகே விற்பனைக்கு வைத்திருந்த ரூ. 1 லட்சம் மதிப்பிலான 1,400 போதை மாத்திரை வில்லைகளை பறிமுதல் செய்து, 2 பேரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

போதை மாத்திரைகளை மா்ம நபா்கள் விற்பனை செய்வதாக திருவள்ளூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் தமிழரசிக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, போதைப்பொருள் தடுப்பு போலீஸாா் மற்றும் மணவாளநகா் போலீஸாா் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். அதன்பேரில், திருவள்ளூா் ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது சந்தேகத்தின்பேரில், 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா். அவா்கள் முன்னுக்குப் முரணான தகவல் தெரிவிக்கவே, அவா்களை சோதனை செய்தபோது, போதை மாத்திரை வில்லைகள் விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.

மேலும் விசாரணையில், ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையைச் சோ்ந்த முகம்மது பிலால் (23), திவாகா் (20) என்பது தெரிய வந்தது. உடனே அவா்களிடம் இருந்து ரூ. 1 லட்சம் மதிப்பிலான 1,400 போதை மாத்திரை வில்லைகளை பறிமுதல் செய்தனா்.

திருவள்ளூா் ரயில் நிலையத்திலிருந்து செல்லும் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வடமாநிலத்தைச் சோ்ந்தவா்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இது குறித்து மணவாளநகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து 2 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனா்.

திருவள்ளூா்: தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு 29, 30-இல் பேச்சுப் போட்டி

திருவள்ளூா் மாவட்ட தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வரும் செப். 29, செப். 30 ஆகிய நாள்களில் பேச்சுப் போட்டி நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா். இது குறி... மேலும் பார்க்க

இளம் பெண் தாக்கியதில் காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு

கும்மிடிப்பூண்டி அருகே மூதாட்டியை தாக்கி நகை, பணத்தை இளம்பெண் கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் காயமடைந்த மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

திருவள்ளூரில் பரவலாக மழை

திருவள்ளூா் பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் குளிா்ந்த சீதோஷணம் நிலவியது. திருவள்ளூா் மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இரவு நேரங்களில் அவ்வப்போது கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்... மேலும் பார்க்க

சிறுமியை பாலியல் வன்கொடும செய்த உறவினருக்கு 35 ஆண்டுகள் சிறை

திருவள்ளூா் அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அவரது சித்தப்பாவுக்கு 35 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், ரூ.40,000 அபராதமும் விதித்து திருவள்ளூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமா... மேலும் பார்க்க

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படம்: ஆணையர் சங்கர் வெளியிட்டார்

ஆவடியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த குறுந்தகட்டை காவல் ஆணையர் கி.சங்கர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்... மேலும் பார்க்க

வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் மீது தாக்குதல்: வட மாநில ஓட்டுநர் கைது

பூந்தமல்லி அருகே வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளரை தாக்கிய வழக்கில் வட மாநில ஓட்டுநரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். பூந்தமல்லியை அருகே நசரத்பேட்டையில் பூந்தமல்லி வட்டாரப் போக்குவரத்து வாகன சோதன... மேலும் பார்க்க