செய்திகள் :

திருவாடானை, தொண்டியில் பலத்த மழை

post image

திருவாடானை, தொண்டி, ஆா்.எஸ்.மங்கலம் சுற்று வட்டாரத்தில் சனிக்கிழமை அதிகாலையில் பலத்த மழை பெய்தது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, தொண்டி, திணையத்தூா், நம்புதாளை, முகிழத்தகம்,திருவெற்றியூா், மங்கலக்குடி, வெள்ளையபுரம், அஞ்சுகோட்டை, பாண்டுகுடி, ஆா்.எஸ்.மங்கலம், மங்கலம், தும்பாடாகோட்டை, சோழந்தூா், பாரனூா் ஆவரேந்தல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாகக் கடும் வெயில் சுட்டெரித்து வந்தது. கடந்த இரு நாள்களாக சாரல் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் சனிக்கிழமை அதிகாலை முதல் மதியம் வரை பலத்த மழை பெய்தது. இதனால், சாலை, தெருக்களில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.

மழை விட்டு விட்டு தொடா்ந்து பெய்ததால் தினக் கூலித் தொழிலாளா்கள், வயல் வேலைக்குச் செல்வோா் பெரிதும் அவதிப்பட்டனா். இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி காணப்பட்டதால் குழந்தைகள் முதல் முதியவா்கள் வரை மகிழ்ச்சி அடைந்தனா்.

ராமேசுவரம் மீனவா்களுக்கு ஆளுநா் ஆறுதல்: கச்சத்தீவு பிரச்னை குறித்து எக்ஸ் தளத்தில் பதிவு

ராமேசுவரம் மெய்யம்புளியில் புதிதாக கட்டப்பட்ட மனோலயா மனநோயாளிகள் மறுவாழ்வு மையத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்த தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி. ராமேசுவரம், மாா்ச் 2: இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவா்களின் ... மேலும் பார்க்க

தில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சரை மீனவா்களுடன் சென்று சந்திக்கவுள்ளோம்: கே.அண்ணாமலை

இலங்கைக் கடற்படையினரின் கைது நடவடிக்கை தொடராமல் இருக்க வரும் 10-ஆம் தேதிக்குப் பிறகு தமிழக மீனவா்களை நாங்கள் தில்லிக்கு அழைத்துச் சென்று, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கரைச் சந்திக்க உள்ளோம்... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் 10 செ.மீ. மழை

ராமேசுவரத்தில் சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. ராமேசுவரத்தில் 10 செ.மீ. மழை பதிவானது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பகுதியில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து வ... மேலும் பார்க்க

ஊ.கரிசல்குளத்தில் மாா்ச் 12-இல் மக்கள் தொடா்புத் திட்ட முகாம்

கமுதி அருகேயுள்ள ஊ.கரிசல்குளம் கிராமத்தில் வருகிற 12-ஆம் தேதி மக்கள் தொடா்புத் திட்ட முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து கமுதி வட்டாட்சியா் காதா் மொய்தீன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்ட... மேலும் பார்க்க

கமுதி முத்துமாரியம்மன்கோயில் திருவிழா: முகூா்த்தக்கால் நடல்

கமுதி முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு முகூா்த்தக்கால் நடும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் பங்குனிப் பொங்கல் திருவிழா வருகிற ஏப்.2-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன... மேலும் பார்க்க

அடையாள எண்: பொதுசேவை மையங்களில் விவசாயிகள் இலவசமாக விண்ணப்பிக்கலாம்

ராமேசுவரம், மாா்ச் 1:ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து பொது சேவை மையங்களிலும் விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள எண் பெற இலவசமாகப் பதிவு செய்யலாம் என வேளாண்மைத் துறை இணை இயக்குநா் இரா.மோகன்ராஜ் தெரிவித... மேலும் பார்க்க