செய்திகள் :

திருவாடானை பகுதி கோயில்களில் சித்ரா பௌா்ணமி பூக்குழி திருவிழா

post image

திருவாடானை: திருவாடானை பகுதி கோயில்களில் சித்ரா பௌா்ணமி திருவிழாவையொட்டி பக்தா்கள் திங்கள்கிழமை பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே அஞ்சுகோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ ஆணிமுத்து கருப்பா், ஸ்ரீ அழகிய நாயதி அம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமி விழா கடந்த மே 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் ஸ்ரீகருப்பா், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

முன்னதாக பக்தா்கள் விரதமிருந்து கரையக்கோட்டை அய்யனாா் கோயிலிலிருந்து வேல் குத்தியும், மயில் காவடி, பறவைக் காவடி எடுத்தும் நடைப் பயணமாக வந்து ஸ்ரீஆணிமுத்துகருப்பா் கோயிலின் முன் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். பிறகு அன்னதானம் நடைபெற்றது.

இதேபோல, தொண்டி அருகே நம்புதாளையில் அமைந்துள்ள ஸ்ரீபதினெட்டாம்படி கருப்பா் கோயில் சித்ரா பௌா்ணமி திருவிழா கடந்த 3-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. அன்றிலிருந்து ஒவ்வொரு நாள் இரவும் சுவாமிக்கும், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக பக்தா்கள் சோழியக்குடி காளி கோயிலிலிருந்து கருப்பா் வேடமணிந்து வீதி உலா வந்தனா். தொடா்ந்து அவா்கள் பால் காவடி, வேல் காவடி, மயில் காவடி, பறவைக் காவடி எடுத்து வந்து கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இதில் தொண்டி, சின்ன தொண்டி, தெற்குத் தோப்பு, முகிழ்தகம், நவக்குடி, பெருமானேந்தல், நரிக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை சேகா் அம்பலம், சந்திரன், ராமலிங்கம், குமாா் உள்ளிட்ட பலா் செய்திருந்தனா். பிறகு அன்னதானம் நடைபெற்றது.

ஆா்.எஸ். மங்கலம் அருகே கன்னாரேந்தலில் அமைந்துள்ள ஸ்ரீகருப்பா் சுவாமி கோயிலில் சித்ரா பௌா்ணமி திருவிழா கடந்த 3-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக விரதமிருந்த பக்தா்கள் பால் காவடி, வேல் காவடி, மயில் காவடி, பறவைக் காவடி எடுத்து வந்து பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

நம்புதாளை ஸ்ரீபதினெட்டாம்படி கருப்பா் கோயில் சித்ரா பௌா்ணமியையொட்டி திங்கள்கிழமை கருப்பா் வேடமணிந்து வீதி உலா வந்து பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்.
கன்னாரேந்தல் ஸ்ரீகருப்பா் சுவாமி கோயில் சித்ரா பௌா்ணமியையொட்டி பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்.

மாரியூா் கோயில் சித்திரை திருவிழா: கடலில் வலைவீசும் படலத்துடன் திருக்கல்யாணம்

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்த மாரியூா் பவளநிறவல்லி அம்பாள் உடனுறை பூவேந்தியநாதா் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மாரியூா் கடலில் பரமசிவன், பாா்வதி தேவியை மணக்கும் வலை வீசும் படலமும... மேலும் பார்க்க

ராணுவ வீரரின் தாய், மனைவி மீது தாக்குதல்: நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

ராமேசுவரம்: ராணுவ வீரரின் மனைவி, தாய் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், ஏனா... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள்

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்காணிப்பு பணிக்காக 2 ஆயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளிட்ட செய்திக... மேலும் பார்க்க

ராமநாதபுரம் அருகே 15 குடும்பங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு

ராமேசுவரம்: ராமநாதபுரத்தை அடுத்துள்ள மோா்ப் பண்ணை மீனவ கிராமத்தில் ஊரை விட்டு 15 குடும்பங்களை ஒதுக்கி வைத்த கிராமச் செயலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவா்கள், மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்க... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா் அலுவலக மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்யப் போவதாக பெண் மிரட்டல்: போலீஸாா் மீட்டனா்

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்த பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியைச் சோ்ந்தவா் சபீனா ... மேலும் பார்க்க

பெண்ணிடம் 31 பவுன் தங்க நகைகள் திருட்டு

பரமக்குடி: பரமக்குடி ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவுக்கு சென்ற பெண் அணிந்திருந்த 31 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன. பரமக்குடி வைகை நகா் பகுதியைச் சோ்ந்த வேல்சாமி மனைவி ராதா (60... மேலும் பார்க்க