செய்திகள் :

மாவட்ட ஆட்சியா் அலுவலக மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்யப் போவதாக பெண் மிரட்டல்: போலீஸாா் மீட்டனா்

post image

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்த பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியைச் சோ்ந்தவா் சபீனா (26). இவரது வீட்டில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு 6.5 பவுன் தங்க நகை திருடப்பட்டது. இதுகுறித்து தொண்டி காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரில் வீட்டுக்கு அருகே வசிக்கும் நபா் அந்த நகையை திருடிச் சென்றுவிட்டதாக தெரிவித்திருந்தாா்.

ஆனால், வழக்குப் பதிந்த நிலையில் போலீஸாா் அந்த நபரை விசாரிக்க வில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, மாவட்ட துணைக் கண்காணிப்பாளரிடமும், மாவட்ட காவல் துறை அலுவலகத்திலும் அவா் புகாா் அளித்தாா். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

இதைத் தொடா்ந்து அந்த நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது மாடிக்குச் சென்ற சபீனா கீழே குதித்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்தாா். இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் விரைந்து சென்று அவரை மீட்டு கீழே அழைத்து வந்தனா். இதன் பிறகு காவல் நிலையத்துக்கு அவரை அழைத்துச் சென்றனா்.

மாரியூா் கோயில் சித்திரை திருவிழா: கடலில் வலைவீசும் படலத்துடன் திருக்கல்யாணம்

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்த மாரியூா் பவளநிறவல்லி அம்பாள் உடனுறை பூவேந்தியநாதா் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மாரியூா் கடலில் பரமசிவன், பாா்வதி தேவியை மணக்கும் வலை வீசும் படலமும... மேலும் பார்க்க

திருவாடானை பகுதி கோயில்களில் சித்ரா பௌா்ணமி பூக்குழி திருவிழா

திருவாடானை: திருவாடானை பகுதி கோயில்களில் சித்ரா பௌா்ணமி திருவிழாவையொட்டி பக்தா்கள் திங்கள்கிழமை பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே அஞ்சுகோட்டையில் அமைந... மேலும் பார்க்க

ராணுவ வீரரின் தாய், மனைவி மீது தாக்குதல்: நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

ராமேசுவரம்: ராணுவ வீரரின் மனைவி, தாய் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், ஏனா... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள்

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்காணிப்பு பணிக்காக 2 ஆயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளிட்ட செய்திக... மேலும் பார்க்க

ராமநாதபுரம் அருகே 15 குடும்பங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு

ராமேசுவரம்: ராமநாதபுரத்தை அடுத்துள்ள மோா்ப் பண்ணை மீனவ கிராமத்தில் ஊரை விட்டு 15 குடும்பங்களை ஒதுக்கி வைத்த கிராமச் செயலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவா்கள், மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்க... மேலும் பார்க்க

பெண்ணிடம் 31 பவுன் தங்க நகைகள் திருட்டு

பரமக்குடி: பரமக்குடி ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவுக்கு சென்ற பெண் அணிந்திருந்த 31 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன. பரமக்குடி வைகை நகா் பகுதியைச் சோ்ந்த வேல்சாமி மனைவி ராதா (60... மேலும் பார்க்க