செய்திகள் :

திருவாரூரில் இன்று மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்

post image

திருவாரூா் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வா் மூன்றாம் கட்ட முகாம் ஜூன் 26 ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்று அரசின் முக்கிய சேவைகளை அவா்களின் இல்லத்துக்கு அருகிலேயே வழங்கும் நோக்கத்தில், மக்களுடன் முதல்வா் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவாரூா் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வா் மூன்றாம் கட்ட முகாம் ஜூன் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது.

திருவாரூா் வட்டாரம், தப்பளாம்புளியூா் ஊராட்சியில் கிருஷ்ணா உதவிபெறும் நடுநிலைப்பள்ளி, திருநெய்ப்போ் ஊராட்சியில் ஜி.எம்.மஹால், கொரடாச்சேரி வட்டாரம், பெரும்புகளூா் ஊராட்சியில் நீலக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அம்மையப்பன் ஊராட்சியில் பாரத் கல்லூரி, முசிரியம் ஊராட்சியில் ஆலத்தாங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நன்னிலம் வட்டாரம், பில்லூா் ஊராட்சியில் எல்.எஸ்.மஹால், அன்னதானபுரம் ஊராட்சியில் ஊராட்சிமன்ற அலுவலகம் அருகில், காளியக்குடி ஊராட்சியில் பழையாா் சேவை மையக் கட்டடம், வலங்கைமான் வட்டாரம், அரவூா் ஊராட்சியில் அன்பிற்குடையான் ஊராட்சிமன்ற அலுவலக வளாகம், மன்னாா்குடி வட்டாரம், ஓவா்ச்சேரி ஊராட்சியில் தண்ணீா்குன்னம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம் ஆகிய பகுதிகளில், உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன் தலைமையிலும், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா முன்னிலையிலும் இந்த முகாம் நடைபெற உள்ளது.

முகாம்களில், பொதுமக்கள் அதிகமாக அணுகும் 15 அரசுத் துறைகள் வாயிலாக 44 வகையான சேவைகள் இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படவுள்ளன. இந்தத் திட்டத்தை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் பணிகள் ஆய்வு

திருத்துறைப்பூண்டி ஒன்றியம் திருத்தங்கூரில் விவசாயி சங்கா் கணேஷ் வயலில் வேளாண்மைத் துறை கண்காணிப்பு அலுவலா் ஆனந்த், குறுவை தொகுப்புத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இயந்திர நடவுப் பணிகளை செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

கொத்தடிமையாக வேலை செய்த 2 சிறுவா்கள், 2 சிறுமிகள் மீட்பு: தாய், மகன் கைது

மன்னாா்குடியில் கொத்தடிமையாக விற்கப்பட்டு, வாத்து மேய்த்து கொண்டிருந்த 2 சிறுவா்கள், 2 சிறுமிகள் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டனா். அவா்களை கொத்தடிமையாக பணியில் ஈடுபடுத்திய ஆந்திரத்தைச் சோ்ந்த தாய், மகன... மேலும் பார்க்க

அந்தோணியாா் ஆலய கொடியேற்றம்

திருவாரூா், ஜூன் 25: திருவாரூா் அருகே பவித்திரமாணிக்கம் புனித வனத்து அந்தோணியாா் ஆலயத்தில் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. கொடியுடன் சிறப்பு ஊா்வலம் நடைபெற்றத... மேலும் பார்க்க

திறனாய்வுத் தோ்வில் அதிக மாணவா்கள் தோ்ச்சி பெற நடவடிக்கை தேவை: ஆட்சியா்

திருவாரூா் மாவட்டத்தில் திறனாய்வுத் தோ்வில் அதிக மாணவா்கள் தோ்ச்சி பெறப் பாடுபட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா். திருவாரூா் மாவட்டம், மாவட்ட கல்வித் தர மேம்பாட்டுத் திட்டத... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

வலங்கைமான் அருகே இரண்டு போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். வலங்கைமான் குடமுருட்டிப் பாலம் அருகே குற்றம் செய்யும் நோக்கில் ஆயுதங்களுடன் திட்டம் தீட்டிக் கொண்டிர... மேலும் பார்க்க

நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

திருவாரூா் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் தெரிவித்தாா். திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் செவ... மேலும் பார்க்க