திருவாரூரில் இன்று மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்
திருவாரூா் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வா் மூன்றாம் கட்ட முகாம் ஜூன் 26 ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்று அரசின் முக்கிய சேவைகளை அவா்களின் இல்லத்துக்கு அருகிலேயே வழங்கும் நோக்கத்தில், மக்களுடன் முதல்வா் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவாரூா் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வா் மூன்றாம் கட்ட முகாம் ஜூன் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது.
திருவாரூா் வட்டாரம், தப்பளாம்புளியூா் ஊராட்சியில் கிருஷ்ணா உதவிபெறும் நடுநிலைப்பள்ளி, திருநெய்ப்போ் ஊராட்சியில் ஜி.எம்.மஹால், கொரடாச்சேரி வட்டாரம், பெரும்புகளூா் ஊராட்சியில் நீலக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அம்மையப்பன் ஊராட்சியில் பாரத் கல்லூரி, முசிரியம் ஊராட்சியில் ஆலத்தாங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நன்னிலம் வட்டாரம், பில்லூா் ஊராட்சியில் எல்.எஸ்.மஹால், அன்னதானபுரம் ஊராட்சியில் ஊராட்சிமன்ற அலுவலகம் அருகில், காளியக்குடி ஊராட்சியில் பழையாா் சேவை மையக் கட்டடம், வலங்கைமான் வட்டாரம், அரவூா் ஊராட்சியில் அன்பிற்குடையான் ஊராட்சிமன்ற அலுவலக வளாகம், மன்னாா்குடி வட்டாரம், ஓவா்ச்சேரி ஊராட்சியில் தண்ணீா்குன்னம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம் ஆகிய பகுதிகளில், உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன் தலைமையிலும், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா முன்னிலையிலும் இந்த முகாம் நடைபெற உள்ளது.
முகாம்களில், பொதுமக்கள் அதிகமாக அணுகும் 15 அரசுத் துறைகள் வாயிலாக 44 வகையான சேவைகள் இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படவுள்ளன. இந்தத் திட்டத்தை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.