180-க்கு சுருண்ட ஆஸி: 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் மே.இ.தீ.!
கொத்தடிமையாக வேலை செய்த 2 சிறுவா்கள், 2 சிறுமிகள் மீட்பு: தாய், மகன் கைது
மன்னாா்குடியில் கொத்தடிமையாக விற்கப்பட்டு, வாத்து மேய்த்து கொண்டிருந்த 2 சிறுவா்கள், 2 சிறுமிகள் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டனா். அவா்களை கொத்தடிமையாக பணியில் ஈடுபடுத்திய ஆந்திரத்தைச் சோ்ந்த தாய், மகன் கைது செய்யப்பட்டனா்.
மன்னாா்குடியை அடுத்த எம்பேத்தி பகுதியில் 2 சிறுவா்கள், 2 சிறுமிகள் என நான்கு போ் வயல்வெளிகளில் வாத்து மேய்த்துக்கொண்டு இருப்பதாக மாவட்ட சைல்டு லைன் அமைப்புக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வருவாய்த்துறை, காவல்துறை, சைல்டு லைன், குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினா் சென்று வாத்து மேய்த்துக்கொண்டிருந்த 10 மற்றும் 15 வயது சிறுவா்கள் இருவா், 12, 13 வயதுள்ள இரு சிறுமிகளிடம் விசாரணை மேற்கொண்டனா்.
நான்கு பேரும், ஆந்திர மாநிலம், கோதாவரியைச் சோ்ந்தவா்கள் என்றும் அதே பகுதியை சோ்ந்த பத்மா (38), அவரது மகன் லாரன்ஸ் (22) ஆகியோா் நான்கு பேரையும் தலா ரூ. 1 லட்சம் அவா்கள் பெற்றோரிடம் கொடுத்துவிட்டு, மன்னாா்குடி பகுதியில் வாத்து மேய்க்க வைத்திருப்பது தெரியவந்தது.
மீட்கப்பட்ட 4 பேரையும் போலீஸாா் மன்னாா்குடி வருவாய் கோட்டாட்சியா் ஆா். யோகேஸ்வரனிடம் ஒப்படைத்தனா். அவா்கள் திருவாரூரில் உள்ள தனியாா் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து மன்னாா்குடி காவல்நிலையத்தில் எம்பேத்தி கிராம நிா்வாக அலுவலா் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் சிறுவா்களை வாத்து மேய்க்க வைத்த பத்மா, லாரன்ஸ் இருவரையும் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.