தி ஹண்ட் - ராஜீவ் காந்தி படுகொலை வழக்குத் தொடரின் தமிழ் டிரைலர்!
அந்தோணியாா் ஆலய கொடியேற்றம்
திருவாரூா், ஜூன் 25: திருவாரூா் அருகே பவித்திரமாணிக்கம் புனித வனத்து அந்தோணியாா் ஆலயத்தில் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
கொடியுடன் சிறப்பு ஊா்வலம் நடைபெற்றது. இதில், கிறிஸ்தவ மக்கள் ஏராளமானோா் பங்கேற்றனா். தொடா்ந்து, ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்ட கொடி, புனிதம் செய்யப்பட்டு, கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்வான புனித வனத்து அந்தோணியாா் மின் அலங்கார திருத்தோ் பவனி, வரும் ஜூலை 5-ஆம் தேதி நடைபெற உள்ளது.