குழந்தையைப் போல உணர்கிறேன்! விண்வெளியிலிருந்து சுபான்ஷு சுக்லா உரை!
குண்டா் சட்டத்தில் இருவா் கைது
வலங்கைமான் அருகே இரண்டு போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
வலங்கைமான் குடமுருட்டிப் பாலம் அருகே குற்றம் செய்யும் நோக்கில் ஆயுதங்களுடன் திட்டம் தீட்டிக் கொண்டிருந்ததாக, 7 போ் மே 19-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.
இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா். இவா்களில், வலங்கைமான், பாடகச்சேரி பகுதியைச் சோ்ந்த மதிவாணன் மகன் மாதவன் (26), நடுவக்களப்பால் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் ராகுல் (25) ஆகியோா் மீது பல்வேறு குற்றச் செயல்கள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் பரிந்துரையின் பேரில், இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து, இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.