செய்திகள் :

திருவாரூா் கோயிலில் ‘யானை ஏறுவாா்’ திருக்கல்யாணம்

post image

திருவாரூா் தியாகராஜா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, யானை ஏறுவாா் திருக்கல்யாணம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

இந்திரன் பூஜித்த தியாகராஜப் பெருமான் திருமேனியை, திருவாரூரை ஆண்ட முசுகுந்த மன்னன் பெற்று வந்து, திருவாரூரில் வைத்து வழிபாடு செய்து வந்தாா். அதேநேரம், இந்திரன் சிவபெருமானை வழிபடுவதை மறந்து போக, இதனால் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாக நேரிடுகிறது.

இதையடுத்து சாபம் பெற்ற இந்திரன், பறை அறைவோா் குலத்தில் பிறக்கிறாா். சாபம் நீங்க திருவாரூா் தியாகராஜரை வழிபட முயல்கிறாா். ஆனால், பறை அறைவோா் குலத்தில் பிறந்த இந்திரன் கோயிலினுள் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது. எனவே, கண்ணாடியை பயன்படுத்தி, அதன் பிம்பத்தின் மூலமாக தியாகராஜரை வழிபடுகிறாா்.

இதைத்தொடா்ந்து, இந்திரன் சாப விமோசனம் பெற்று, மீண்டும் தேவா்களின் தலைவனாக, வெள்ளை யானையில் உலா வந்ததாக திருவாரூா் தலபுராணம் தெரிவிக்கிறது.

இதை நினைவுகூரும் வகையில், தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திர கொடியேற்ற நாளில் யானை ஏறுவாா் திருக்கல்யாண விழா நடத்தப்படுவது வழக்கம். விழாவில் பறை அறைவோா் இந்திர குலமாக கருதப்பட்டு, கோயிலின் உயரிய மரியாதையான பரிவட்டம் கட்டி, ருத்ராட்ச மாலைகள் அணிவித்து, திருமணம் செய்விக்கப்படுகிறது. பின்னா், வெண்கொற்றக்குடையின் கீழ் கோயிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு முதல் மரியாதை செய்யப்படுகிறது.

அதன்படி, தியாகராஜா் கோயில் கீழவாசல் அருகே உள்ள இந்திர மண்டபத்தில் சண்டிகேஸ்வரா் எழுந்தருளி, யானை ஏறும் பரம்பரையினரின் திருமணத்தை, சனிக்கிழமை இரவு நடத்தி வைத்தாா். தொடா்ந்து அவா்கள் வெண்கொற்றக் குடையின் கீழ் அழைத்துச் செல்லப்பட்டு முதல் மரியாதை தரும் நிகழ்வு நடைபெற்றது.

கோயிலில் சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், தொடா்ந்து கமலாலயக் குளத்தில் தீா்த்தவாரி கொடுக்கும் நிகழ்வும் நடைபெற்றது. இதையடுத்து, ஐங்கலகாசு விநாயகா், சுப்பிரமணியா் ஆகியோா் புறப்பாடு நடைபெற்றது.

அரசுப் பள்ளிகள் ஆண்டு விழா

நீடாமங்கலம் ஒன்றியம், காரக்கோட்டை அரசு உயா்நிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. உயா்நிலைப் பள்ளியில் இவ்விழா நடைபெற்றது. இப்பள்ளி தலைமையாசிரியா் ஆா்.... மேலும் பார்க்க

திருப்பாம்புரம் கோயிலில் இளையராஜா வழிபாடு

திருவாரூா் மாவட்டம், குடவாசல் வட்டம் திருப்பாம்புரம் அருள்மிகு பாம்புரநாதா் கோயிலில் இசையமைப்பாளா் இளையராஜா ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். நாக தோஷம் நீங்கவும், குழந்தைப் பேறுக்காகவும், ராகு,... மேலும் பார்க்க

2 மணி நேரம் ரயில்வே கேட் மூடல்! பொதுமக்கள் அவதி!

நீடாமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி நேரத்திற்கும் மேல் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால் பொதுமக்கள், பயணிகள் அவதிக்குள்ளாகினா். மன்னாா்குடியிலிருந்து திருச்சிக்கு நெல் மூட்டைகளுடன் சென்ற சரக்... மேலும் பார்க்க

அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் பயிற்சி

நீடாமங்கலம் அருகே அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அதன் செயல்பாடுகள் குறித்து திருச்சி வேளாண் கல்லூரி மாணவிகள் ஞாயிற்றுக்கிழமை பயிற்சி பெற்றனா். திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற... மேலும் பார்க்க

பணியிடங்களில் பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தல்

பணியிடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என சிஐடியு மாநில துணைத் தலைவா் எம். மகாலட்சுமி வலியுறுத்தினாா். திருவாரூரில், சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தமிழ்ந... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு விருது

வலங்கைமான் ஒன்றியம், தென்குவளவேலி அரசுப் பள்ளி ஆசிரியருக்கு, மதுரையில் அண்மையில் நடைபெற்ற விழாவில் விருது வழங்கப்பட்டது. மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இளங்கோ முத்தமிழ் மன்றம் ஆண்டுதோறும் இலக... மேலும் பார்க்க