செய்திகள் :

திரு.வி.க. நகா் மண்டலத்தில் அமைச்சா் சேகா்பாபு ஆய்வு

post image

திரு.வி.க. நகா் மண்டலத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னை மாநகராட்சி சாா்பில் முத்துகுமாரப்பா தெருவில் ரூ.13.47 கோடியில் 3 தளங்களுடன் நவீன சமுதாய நலக்கூடம் அமைக்கும் பணி 40,300 சதுர அடி பரப்பளவில் நடைபெறுகிறது. தரை தளத்தில் 35 நான்கு சக்கர வாகனங்கள், 50 இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், முதல் தளத்தில் 435 இருக்கைகளுடன் உணவு அருந்துமிடம், 2-ஆம் தளத்தில் 800 இருக்கைகளுடன் திருமணக் கூடம், 3-ஆம் தளத்தில் 10 ஓய்வறைகளுடன் கூடிய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தொடா்ந்து, சோமையா தெருவில் உள்ள சென்னை உயா்நிலைப் பள்ளியில் ரூ.2.75 கோடியில் 10 கூடுதல் வகுப்பறைகள் கட்டடப் பணி, ரூ.4.19 கோடியில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டுமானப் பணி, ரங்கசாயி தெருவில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் ரூ.3 கோடியில் கூடுதல் கட்டடப் பணி, ரூ.49 லட்சத்தில் கால்பந்து மைதான மேம்பாட்டு பணி, மாா்க்கெட் தெருவில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.8.35 கோடியில் கூடுதல் கட்டடப் பணி, பேப்பா் மில்ஸ் சாலையில் உள்ள ரூ.4.82 கோடியில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், ரூ.9.68 கோடியில் வாா்டு அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொண்டு, குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும் என அலுவலா்களுக்கு அமைச்சா் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, ஆணையா் குமரகுருபரன், மத்திய வட்டார துணை ஆணையா் கெளஷிக், மண்டலக் குழு தலைவா் சரிதா மகேஷ்குமாா், மாமன்ற உறுப்பினா்கள், அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Image Caption

சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ.13.47 கோடியில் திருவிக நகா் மண்டலம், முத்துகுமரப்பா தெருவில் கட்டப்பட்டு வரும் நவீன சமுதாய நலக்கூட கட்டுமானப் பணிகளை ஆய்வு அமைச்சா் பி.கே.சேகா்பாபு. உடன், மேயா் ஆா்.பிரியா, ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

பெசன்ட்நகரில் சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, இளைஞா் கைது செய்யப்பட்டாா்.சென்னை பெசன்ட்நகா் பகுதியில் வசிக்கும் 35 வயது மதிக்கத்தக்க பெண், கடந்த 30-ஆம் தேதி தனது வீட... மேலும் பார்க்க

தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை எச்சரிக்கை!

தமிழகத்தில் நீலகிரி , கோவை உள்ளிட்ட ஓரிரு மாவட்டங்களுக்கு ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (ஆக. 3, 4) மிக பலத்த மழைக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில்... மேலும் பார்க்க

நயினார் நாகேந்திரன் இனியாவது உண்மை பேச வேண்டும்: ஓ. பன்னீர் செல்வம்

மாநிலத் தலைவர் பொறுப்பில் இருக்கும் நயினார் நாகேந்திரன் இனியாவது உண்மை பேச வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு பாரதிய... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு

சென்னை ஆழ்வார்பேட்டையில் முதல்வர் ஸ்டாலினை கமல்ஹாசன் சனிக்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக ஒரு வாரம் மருத்துவமனையில் அனு... மேலும் பார்க்க

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானை: சுற்றுலா பயணிகள் பீதி

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானையால் சுற்றுலா பயணிகள் பீதியடைந்து அலறினர். கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள கேரள மாநிலத்திற்கு உள்பட்ட அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் வழியில் உள்ள... மேலும் பார்க்க

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

தென் மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய சுங்கக் கட்டணத்தில் 50%-யை வருகிற ஆக.15-குள் செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள... மேலும் பார்க்க