செய்திகள் :

திரைத்துறையில் நீடிக்கும் பாலின பாகுபாடு..! மாதுரி தீக்‌ஷித்!

post image

சர்வதேச திரைப்பட விழாவில் பங்குபெற்ற நடிகை மாதுரி தீக்‌ஷித் திரைத்துறையில் ஆண்,பெண் பாகுபாடு அதிகமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.

1984இல் ஹிந்தி சினிமாவில் அறிமுகமான மாதுரி தீக்‌ஷித் ஆண்கள் ஆதிக்கமுள்ள சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளார்.

பத்மபூஷன் விருது பெற்றுள்ள மாதுரி தீக்‌ஷித் 70க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். 1999-ல் மருத்துவர் ஸ்ரீராமைத் திருமணம் செய்துகொண்ட மாதுரி தீட்சித், அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார்.

சில வருடங்களுக்கு முன்பு குடும்பத்துடன் இந்தியாவுக்குத் திரும்பி திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடந்து பங்கேற்று வருகிறார். 

காலத்துக்கும் நிரூபிக்க வேண்டிய சூழலில் பெண்கள்

இந்நிலையில் சர்வதேச திரைப்பட விழாவில் அவர் பேசியதாவது:

பெண்கள் காலத்துக்கும் தங்களை நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டும். ஆண்களுக்கு சமமானவர்கள் பெண்கள் எனவும் பார்வையாளர்களை எங்களாலும் ஈர்க்க முடியுமென ஓவ்வொரு முறையும் நிரூபிக்க வேண்டியுள்ளது.

உண்மையில் சினிமா துறையில் பாகுபாடு உள்ளது. குழந்தை அடியெடுத்து வைப்பதுபோல ஒவ்வொன்றாக பொறுமையாக எடுத்து வைத்து முன்னேறுகிறோம்.

பாகுபாடு நடைபெறவில்லையென்பதை உறுதிப்படுத்த இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அதை நோக்கிதான் தினமும் வேலை செய்து வருகிறோம்.

திரைத்துறையில் நீடிக்கும் பாலின பாகுபாடு

சம்பளத்திலேயே ஆண், பெண் பாகுபாடு உள்ளது. ஆண்கள் ஒருமுறை செய்வதை நாங்கள் 10 முறை அதிகாமாக செய்ய வேண்டியுள்ளது. இது மிகவும் கடினம்.

இதற்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு பெண்களிடம் வந்து சேர்வதை ஆச்சரியமாகப் பார்க்கிறேன். இதற்கு நடிகர்கள்தான் பதிலளிக்க வேண்டுமென நினைக்கிறேன்.

வசூலில் அசத்திய பெண்களுக்கு முக்கியத்துவமுள்ள ஸ்ட்ரீ 2 போன்ற படங்கள் அதிகம் வரவேண்டும். இதற்கு குறுக்கு வழிகள் என எதுவும் இல்லை என்றார்.

கடைசியாக பூல் புலையா 3 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். 57 வயதிலும் முதன்மை கதாபாத்திரமாக இணையத்தொடரிலும் நடித்துள்ளார்.

தினம் தினம் திருநாளே!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.10-03-2025திங்கள்கிழமைமேஷம்:இன்று உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்... மேலும் பார்க்க

3-ஆவது இடத்தில் ரியல் காஷ்மீா்

ஐ லீக் கால்பந்து தொடரில் ரியல் காஷ்மீா் அணி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்திய கால்பந்து சம்மேளனம் சாா்பில் இரண்டாம் நிலை அணிகளுக்கு ஐ லீக் தொடா் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரிய... மேலும் பார்க்க

ஜோகோவிச், ருப்லேவ் அதிா்ச்சித் தோல்வி

இண்டியன்வெல்ஸ் பிஎன்பி பரிபாஸ் ஏடிபி, டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டியில் 24 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ஜோகோவிச், முன்னணி வீரா் ருப்லேவ் அதிா்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினா். அமெரிக்காவின் இண்டியன்வெல்... மேலும் பார்க்க

வெற்றியுடன் கடைசி ஆட்டத்தை நிறைவு செய்தது சென்னை!

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் தனது கடைசி ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூா் எஃப்சியை 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றியுடன் நிறைவு செய்தது சென்னையின் எஃப்சி அணி. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சென்னை ஜவாஹா்லால... மேலும் பார்க்க

இணையத்தொடரில் நடிக்க நிபந்தனை விதித்த கீர்த்தி சனோன்!

நடிகை கீர்த்தி சனோன் முதல்முறையாக இணையத்தொடரில் அறிமுகமாகவிருக்கிறார்.தெலுங்கில் அறிமுகமான நடிகை கீர்த்தி சனோன் தற்போது ஹிந்தியில் பிஸியாக நடித்து வருகிறார். ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸுடன் நடித்தார். ப... மேலும் பார்க்க

46 வயதில் தாயாகவுள்ளதை அறிவித்த சின்ன திரை நடிகை!

சின்ன திரை நடிகையும் ரெடின் கிங்ஸ்லியின் மனைவியுமான சங்கீதா தான் கருவுற்றுள்ளதை அறிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவர் பகிர்ந்துள்ளார். சின்ன திரை நடிகையான சங... மேலும் பார்க்க