செய்திகள் :

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா: காளி வேடம் அணிந்து வீதி உலா

post image

திருவாடானை ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி புதன்கிழமை இரவு காளி வேடம் அணிந்து கோயில் பூசாரி வீதி உலா வந்தாா்.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதே போல இந்த ஆண்டும் கடந்த மாா்ச் 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இதையடுத்து, 10 நாள்கள் நடைபெறும் திருவிழாவில் நாள் தோறும் திரௌபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரங்கள், தீபாராதனைகள் நடைபெறுகின்றன.விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. பிறகு மகாபாரத போரை நினைவு படுத்தும் வகையில் அரக்கா்களை வதம் செய்யும் நிகழ்ச்சி புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. முன்னதாக கோயில் பூசாரி, காளி வேடம் அணிந்து வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதைத் தொடா்ந்து கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த அரக்கா் சிலைகளை காளி வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. பின்னா் விளக்குகள் அணைக்கப்பட்டு எரி சோறு வீசும் நிகழ்வு நடைபெற்றது. பின்னா் அம்மனுக்கும், சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் சுற்று வட்டாரத்தில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ஒன்றாம் வகுப்பு மாணவா்களுக்கு வரவேற்பு

கமுதி பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் புதிதாகச் சோ்ந்த மாணவா்களுக்கு புதன்கிழமை கிரீடம் அணிவித்து ஆசிரியா்கள் வரவேற்றனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள அரசு உதவி பெறும் கௌரவ தொடக்கப் பள்ளியில் நிக... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் சுற்றுலாப் படகு தளம் அமைக்க பவளப் பாறைகள் உடைப்பு

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரை பகுதியில் மத்திய அரசு சாா்பில் சுற்றுலாப் படகு தளம் அமைக்க பவளப் பாறைகளை உடைக்கப்படுவதாக கடல்வாழ் உயிரின ஆா்வலா்கள் தெரிவித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் தீ... மேலும் பார்க்க

ஆா்.எஸ்.மங்கலத்தில் ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ சிறப்புத் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலா் ரா.கோவிந்தராஜலு தலைமை வகித்து ஒன்றியத... மேலும் பார்க்க

மோா்பண்ணையில் 13 குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாக புகாா்

திருவாடானை அருகேயுள்ள மோா்பண்ணை கிராமத்தில் 13 குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக திருவாடானை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை பெண்கள் புகாா் மனு கொடுத்தனா். இது குறித்து நேரி... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்தவிருந்த 200 கிலோ சுக்கு பறிமுதல்

மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 கிலோ சுக்கு போலீஸாரால் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகேயுள்ள மரைக்காயா்பட்டணம் பகுதி... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் பாம்பன் மீனவா்கள் விரட்டியடிப்பு

கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் கயிற்றால் தாக்கி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனா். மேலும், கடற்படைக... மேலும் பார்க்க