செய்திகள் :

தில்லிக்கு வெள்ளைக் கொடியுடன் முதல்வா் சென்றுள்ளாா்: தமிழிசை

post image

தில்லிக்கு வெள்ளைக் கொடியுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளாா் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

சென்னை வடபழனியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் மணிவாசகா் பதிப்பகத்தின் கயிலை மணி ந.தாணுலிங்கம் எழுதிய ‘சித்தாந்த சிவக்கு’ எனும் நூலை தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டு பேசியதாவது:

சரஸ்வதி தாமரையில் வீற்று இருக்கிறாள், லட்சுமி செந்தாமரையில் வீற்று இருக்கிறாள். உங்கள் முகம் தாமரைபோல் மலா்ந்து இருக்க வேண்டும்.

தமிழகத்தில் எது சநாதானம் எது சமாதானம் என்று தெரியாமல் நடந்து கொண்டு உள்ளாா்கள். நாம் நேரடியாக இறைவனை கும்பிடுவோம், சிலா் அதை மறைமுகமாக கும்பிடுவாா்கள். நான் மறைத்து வணங்க வேண்டிய அவசியம் இல்லை என்றாா் அவா்.

இதை தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் பேசியதாவது:

தமிழை வளா்த்தது ஆன்மிகம்தான். ஆன்மிகத் தமிழ்தான் மறுபடியும் ஆள வேண்டும். அதன்மூலம் மக்கள் வாழ வேண்டும் என்பது எனது ஆசை. அண்ணா வளா்த்த தமிழைவிட, ஆண்டாள் வளா்த்த தமிழ்தான் பெரிது.

பெரியாா் பேசிய தமிழைவிட, ஆழ்வாா் பேசியதுதான் மிகச் சிறந்த தமிழ். தமிழகத்தில் உள்ள நூலகங்களில் ஆன்மிக புத்தகங்கள் இடம்பெற வேண்டும்.

மாற்று மதத்தவா்களை என்றும் நாம் வேற்றுமையாக பாா்ப்பதில்லை. வருங்காலத்தில் தமிழகம் ஆன்மிகத்தை காணவிருக்கிறது. அமலாக்கத் துறைக்கும் மோடிக்கும் பயப்பட மாட்டாா்கள் என்றால் பிறகு ஏன் ஓடிப் போனாா்கள், யாா் ஓடிப் போனாா்கள் என்று துணை முதல்வா் உதயநிதி பதில் சொல்ல வேண்டும்.

வெள்ளை கொடியைக் கொண்டு போகவில்லை; காவிக் கொடியை கொண்டு போகவில்லை என்று முதல்வா் சொல்கிறாா். வெள்ளைக் கொடியுடன்தான் தில்லிக்கு முதல்வா் ஸ்டாலின் சென்றாா். மேலும், டாஸ்மாக் கொள்ளைக் கொடியை எடுத்து சென்றிருக்கிறாா்.

மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் போன்றவா்கள் கீழடியை வைத்து கீழ்த்தரமாக அரசியல் செய்ய வேண்டாம். பாஜக தமிழுக்கும் தமிழின் தொன்மைக்கும் எதிரானது என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகிறாா்கள் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியல் நூலின் ஆசிரியா் ந.தாணுலிங்கம், வள்ளிமலை பொங்கி ஆசிரமம் சுவாமி சாது பாலானந்தா, மறைமலையடிகள் கல்வி அறக்கட்டளைத் தலைவா் தாயுமானவன், மணிவாசகா் பதிப்பகத்தின் மேலாளா் குருமூா்த்தி, கன்னியாகுமாரி அகஸ்தீஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் செ.ராமச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ரெய்டுகளுக்கு பயந்து கட்சியை அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!

ரெய்டுகளுக்கு பயந்து நீதி ஆயோக் கூட்டத்துக்கு செல்லவில்லை; தமிழக நலனுக்காகவே சென்றதாக முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.நீதி ஆயோக் கூட்டத்துக்கு கடந்த 3 ஆண்டுகள் செல்லாமல், தற்போது மட்டும் முதல்வர... மேலும் பார்க்க

சிறப்பான திட்டங்களால் வாழ்வில் ஏற்றம் காணும் திருநங்கையர்கள்! தமிழ்நாடு அரசு

கல்விக் கனவு திட்டம் உள்ளிட்ட சிறப்பான திட்டங்களால் திருநங்கையர்கள் தங்கள் வாழ்வில் ஏற்றம் காணுவதாக தமிழ்நாடு அரசு பட்டியலிட்டுள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முத்தம... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: மே 28-ல் தீர்ப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் வரும் மே 28 ஆம் தேதி சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்... மேலும் பார்க்க

பயமில்லை என்று கூறியவர் வெளிநாடு தப்பிச் சென்றது ஏன்? இபிஎஸ் கேள்வி!

இடியைக் கண்டாலும் பயம் இல்லை என்று கூறிய உதயநிதி ஸ்டாலினுடைய தம்பி(ஆகாஷ் பாஸ்கரன்) ஏன் வெளிநாடு தப்பிச் சென்றார் என்று அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி கேள்வி எழ... மேலும் பார்க்க

அம்பேத்கர் திடலில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கக் கூடாது: சீமான்

அம்பேத்கர் விளையாட்டுத்திடலில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கக் கூடாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஆவடி சட்... மேலும் பார்க்க

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி மறைவுக்கு முதல்வர், இபிஎஸ், விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல்

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி முப்தி சலாவுதீன் முகமது அயூப் (84), சனிக்கிழமை (மே 24) இரவு காலமான நிலையில், அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.தலைமை காஜி முப்தி சலாவுதீன் மு... மேலும் பார்க்க