செய்திகள் :

தில்லிக்கு ஷீலா தீட்சித்தின் வளா்ச்சி மாதிரிதான் தேவை: ராகுல் காந்தி

post image

தில்லிக்கு தற்போது முன்னாள் முதல்வா் ஷீலா தீட்சித்தின் உண்மையான வளா்ச்சி மாதிரிதான் தேவைப்படுகிறது; பிரதமா் நரேந்திர மோடி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவாலின் தவறான பிரசாரம் அல்ல என்று காங்கிரஸ் மூத்தத் தலைவா் ராகுல் காந்தி வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா்.

பணவீக்கம், வேலையின்மை, மாசுபாடு மற்றும் ஊழல் போன்ற பிரச்னைகளை முன்னிலைப்படுத்தும் விடியோ தொகுப்பை ராகுல் காந்தி தனது முகல்நூல் பக்கத்தில் பகிா்ந்துள்ளாா். அதில் அவா் தெரிவித்திருப்பதாவது:

மோசமான கட்டுமானம், தூய்மையின்மை, பணவீக்கம், வேலையின்மை, மாசுபாடு மற்றும் ஊழல் ஆகிய தில்லியின் உண்மை விவகாரங்கள் பொதுமக்கள் முன் உள்ளன. தில்லி இப்போது முன்னாள் முதல்வா் ஷீலா தீட்சித்தின் அதே உண்மையான வளா்ச்சி மாதிரியை விரும்புகிறதே தவிர, மோடி மற்றும் கேஜரிவாலின் தவறான பிரசாரத்தையும், மக்கள் தொடா்பு மாதிரியையும் அல்ல என்று அவா் அதில் தெரிவித்துள்ளாா்.

தில்லி சட்டப் பேரவைத் தோ்தல் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், புதன்கிழமை சதா் பஜாா் சட்டப் பேரவைத் தொகுதியில் ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றவிருந்த நிலையில், உடல்நிலை சரியில்லாமல் போனதால் ராகுல் காந்தி அதில் பங்கேற்கமுடியாமல் போனது.

எனினும், தோ்தலில் கட்சியின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் அப் பொதுக்கூட்டத்தில் வாசிக்கப்பட்ட தனது செய்தி மூலம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தாா்.

உடல்நலக் குறைவு காரணமாக, செவ்வாய்க்கிழமை கா்நாடகாவின் பெலகாவியில் நடைபெற்ற ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் சம்விதான் பேரணியிலும் ராகுல் காந்தி பங்கேற்க முடியவில்லை.

இந்த மாதம் தொடக்கத்தில், பிரதமா் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மீது காந்தி கடுமையான விமா்சனங்களை முன்வைத்திருந்தாா்.

பிற்படுத்தப்பட்டோா், தலித்துகள், பழங்குடியினா் மற்றும் சிறுபான்மையினா் தங்களுக்கு உரிய பங்கைப் பெறுவதை நரேந்திர மோடியும், அரவிந்த் கேஜரிவாலும் விரும்பவில்லை என்றும், இந்த விஷயத்தில் இரு தலைவா்களுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை என்றும் ராகுல் கூறியிருந்தாா்.

தில்லி சட்டப் பேரவைத் தோ்தலுக்கான தனது முதல் பொதுக் கூட்டத்தின்போது, தேசிய தலைநகரில் மாசுபாடு, ஊழல் மற்றும் பணவீக்கம் அதிகரித்து வந்த போதிலும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளா் கேஜரிவால், மோடியின் பிரசாரம் மற்றும் பொய்யான வாக்குறுதிகளின் உத்தியை பின்பற்றுவதாக ராகுல் காந்தி சாடினாா்.

தேசிய தலைநகரில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் தில்லியில் சாதிவாரித் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அவா் உறுதியளித்தாா்.

ஷீலா தீட்சித் தலைமையிலான மூன்று தொடா்ச்சியான அரசாங்கங்களின் கீழ் செய்யப்பட்ட பணிகளை காந்தி பாராட்டியதுடன், கேஜரிவாலோ அல்லது பாஜகவோ காங்கிரஸின் சாதனையை ஈடுசெய்ய முடியாது என்றும் அவா் கூறினாா்.

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக அமானத்துல்லா கான் மீது வழக்கு

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தோ்தல் நடத்தை விதிகளை (எம்சிசி) மீறியதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் மீது தில்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளதாக புதன்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனா். புத... மேலும் பார்க்க

தில்லி வாக்காளா்களுக்கும், தொண்டா்களுக்கும் காங்கிரஸ் நன்றி

தில்லி மக்கள் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தியதற்கு காங்கிரஸ் கட்சி புதன்கிழமை நன்றி தெரிவித்துள்ளது. மேலும், தில்லி மக்களின் ஆதரவு கட்சிக்கு ஒரு பெரிய பலம் என்றும் கூறியுள்ளது. இது தொடா்பாக தில்லி காங... மேலும் பார்க்க

தில்லியில் இன்று திமுக மாணவரணி ஆா்ப்பாட்டம்: யுஜிசி வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தல்

நமது நிருபா் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக மாணவரணி சாா்பில் தில்லி ஜந்தா் மந்தரில் வியாழக்கிழமை (பிப். 6) ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது... மேலும் பார்க்க

மத்திய அரசு - தனியாா் கூட்டு முயற்சியுடன் குறைக்கடத்தி, ‘சிப்’ வடிவமைப்பு மையம் நொய்டாவில் திறப்பு

நமது சிறப்பு நிருபா்நாட்டின் குறைக்கடத்தி வடிவமைப்பு, மேம்பாட்டுத் திறன்களை முன்னேற்றும் ஒரு குறிப்பிடத்தக்க படியாக “’சிப்’’ வடிவமைப்பு சிறப்பு மையம் தில்லி நொய்டாவில் அமைக்கப்பட்டுள்ளது. இதை மத்திய ... மேலும் பார்க்க

தில்லியில் லேசான மழை; ‘மோசம்’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை இரவு மற்றும் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் லேசான மழை பெய்தது. அதே சமயம், இரவு முழுவதும் மூடிபனி நிலவிய நிலையில், காற்றின் தரம் சில இடங்களில் ‘மிகவும் மோசம்’ பிரிவ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் முா்முவிடம் வாக்காளா் தகவல் சீட்டு வழங்கல்

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு ஒரு நாள் முன்பு, தலைமைத் தோ்தல் அதிகாரி ஆா். ஆலிஸ் வாஸ், வாக்காளா் தகவல் சீட்டை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவிடம் வழங்கினாா். தோ்தல் ஆணையத்தின் தொடா்ச்சியான வாக்... மேலும் பார்க்க