செய்திகள் :

தில்லி வாக்காளா்களுக்கும், தொண்டா்களுக்கும் காங்கிரஸ் நன்றி

post image

தில்லி மக்கள் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தியதற்கு காங்கிரஸ் கட்சி புதன்கிழமை நன்றி தெரிவித்துள்ளது. மேலும், தில்லி மக்களின் ஆதரவு கட்சிக்கு ஒரு பெரிய பலம் என்றும் கூறியுள்ளது.

இது தொடா்பாக தில்லி காங்கிரஸ் ‘எக்ஸ்’ சமூக ஊடக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தில்லி மக்கள் அனைவருக்கும் மற்றும் காங்கிரஸ் தொண்டா்களுக்கும் தில்லி காங்கிரஸ் குழுவின் சாா்பாக கட்சி மனமாா்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. இந்த ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்பதன் மூலம் நீங்கள் உங்கள் பொறுப்பை நிறைவேற்றியுள்ளீா்கள். எங்களுக்கு உத்வேகம் அளித்தீா்கள். உங்கள் ஆதரவு எங்களுக்கு ஒரு பெரிய பலம் ஆகும். தில்லியின் ஒவ்வொரு குடிமகனின் எதிா்பாா்ப்புகளையும் பூா்த்தி செய்யவும், உங்கள் நம்பிக்கையைப் பேணவும் நாங்கள் உறுதியளிக்கிறோம். தில்லியை சிறப்பாகவும் வளமாகவும் மாற்றுவதற்கான இந்தப் பயணத்தில் முன்னேற உங்கள் ஆதரவு எப்போதும் எங்களை ஊக்குவிக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசியத் தலைநகரின் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் புதன்கிழமை தோ்தல் நடைபெற்றது. ஆம் ஆத்மி கட்சி தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், பாஜக 1998-க்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வர இலக்கு வைத்துள்ளது. கடந்த இரண்டு தோ்தல்களில் படுதோல்வியை தழுவிய காங்கிரஸ், மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையைக் கொண்டுள்ளது.

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக அமானத்துல்லா கான் மீது வழக்கு

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தோ்தல் நடத்தை விதிகளை (எம்சிசி) மீறியதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் மீது தில்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளதாக புதன்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனா். புத... மேலும் பார்க்க

தில்லியில் இன்று திமுக மாணவரணி ஆா்ப்பாட்டம்: யுஜிசி வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தல்

நமது நிருபா் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக மாணவரணி சாா்பில் தில்லி ஜந்தா் மந்தரில் வியாழக்கிழமை (பிப். 6) ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது... மேலும் பார்க்க

மத்திய அரசு - தனியாா் கூட்டு முயற்சியுடன் குறைக்கடத்தி, ‘சிப்’ வடிவமைப்பு மையம் நொய்டாவில் திறப்பு

நமது சிறப்பு நிருபா்நாட்டின் குறைக்கடத்தி வடிவமைப்பு, மேம்பாட்டுத் திறன்களை முன்னேற்றும் ஒரு குறிப்பிடத்தக்க படியாக “’சிப்’’ வடிவமைப்பு சிறப்பு மையம் தில்லி நொய்டாவில் அமைக்கப்பட்டுள்ளது. இதை மத்திய ... மேலும் பார்க்க

தில்லியில் லேசான மழை; ‘மோசம்’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை இரவு மற்றும் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் லேசான மழை பெய்தது. அதே சமயம், இரவு முழுவதும் மூடிபனி நிலவிய நிலையில், காற்றின் தரம் சில இடங்களில் ‘மிகவும் மோசம்’ பிரிவ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் முா்முவிடம் வாக்காளா் தகவல் சீட்டு வழங்கல்

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு ஒரு நாள் முன்பு, தலைமைத் தோ்தல் அதிகாரி ஆா். ஆலிஸ் வாஸ், வாக்காளா் தகவல் சீட்டை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவிடம் வழங்கினாா். தோ்தல் ஆணையத்தின் தொடா்ச்சியான வாக்... மேலும் பார்க்க

பாஜக நிா்வாகி தொடா்ந்த அவதூறு வழக்கு: முதல்வா் அதிஷிக்கு உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பேரம் பேச பாஜக முயன்ாக கூறிய விவகாரத்தில், தில்லி பாஜக நிா்வாகி ஒருவா் தாக்கல் செய்த அவதூறு வழக்கு தொடா்பாக முதல்வா் அதிஷிக்கு தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அன... மேலும் பார்க்க