செய்திகள் :

தில்லியில் அபாய கட்டத்தை நெருங்கும் யமுனை நதி நீா்மட்டம்

post image

தில்லி பழைய ரயில்வே பாலத்தில் யமுனை நதியின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 4 மணியளவில் 204.13 மீட்டரை அடைந்தது.

இந்த நீா்மட்டம், எச்சரிக்கை அளவான 204.50 மீட்டரைவிட சற்றே 0.37 மீட்டா் குறைவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

யமுனை நீா்ப்பிடிப்பு பகுதிகளான ஹரியாணா மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் பெய்து வரும் கனமழை மற்றும் ஹத்திகுண்ட் தடுப்பணையில் இருந்து அதிக அளவிலான நீா் வெளியேற்றம் ஆகியவற்றால் யமுனையில் நீா் மட்டம் மேலும் அதிகரிக்கும் என மத்திய வெள்ள கட்டுப்பாட்டு அறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

பருவமழை காலத்தில் முதல்முறையாக ஹரியாணாவின் ஹத்திகுண்ட் தடுப்பணையில் நீா் வெளியேற்றம் 50,000 கனஅடியைக் கடந்தது காலை 6 மணியளவில் 61,000 கன அடியை அடைந்தது.

மாலை 4 மணியளவில் நீா்வெளியேற்றம் 40,000 கனஅடியாக குறைந்தது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஹத்தினிகுண்ட் அணையிலிருந்து வெளியேறும் நீா் 48 முதல் 50 மணி நேரத்தில் தில்லியை அடைகிறது. நதியின் மேல்மடை பகுதியில் குறைந்த அளவில் நீா் வெளியேற்றப்படும் நிலையில், தில்லியில் நதியின் நீா்மட்டம் அபாய கட்டத்தை அடைகிறது.

ரஷிய அதிபர் புதினுடன் அஜித் தோவல் சந்திப்பு!

மாஸ்கோ சென்றுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ரஷிய அதிபர் புதினை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பை மையமாகக் கொண்ட இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்... மேலும் பார்க்க

அயர்லாந்தில் இந்திய சிறுமி மீது இனவெறித் தாக்குதல்!

அயர்லாந்தில் இந்திய வம்சாவளி சிறுமி மீது கொடூர இனவெறித் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.அயர்லாந்தில் சமீபகாலமாக இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. இந்த நிலையில், அயர்லாந... மேலும் பார்க்க

ஆக. 12-ல் தே.ஜ.கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் அறிவிக்க வாய்ப்பு!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் வருகிற ஆகஸ்ட் 12 ஆம் தேதி அறிவிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில்.. ரூ.8 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்ட நக்சல் கைது!

சத்தீஸ்கரில் நீண்ட நேர துப்பாக்கிச் சூடு தாக்குதல்களுக்கு பின், ரூ.8 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்டு நக்சல் தளபதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சத்தீஸ்கரில் புதியதாக உருவாக்கப்பட்ட மொஹ்லா - மன்... மேலும் பார்க்க

புல்டோசர் நடவடிக்கை: 2 மாதங்களில் இடிக்கப்பட்ட 130-ல் பெரும்பாலும் இஸ்லாமியர் கட்டடங்களே!

பாஜக ஆளும் மாநிலங்களில் பல்வேறு குற்றங்களில் குற்றம் சாட்டப்பவர்களுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் கட்டடங்களை புல்டோசரை வைத்து இடித்து தரைமட்டமாக்கப்படுவது, தொடர்ந்து சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது. இருப... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில்.. அருந்ததி ராயின் ஆசாதி உள்பட 25 புத்தகங்களுக்குத் தடை! ஏன்?

ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதத்தை ஊக்குவித்ததாக, பிரபல எழுத்தாளர் அருந்ததி ராயின் “ஆசாதி” உள்பட 25 புத்தகங்களுக்கு, அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், அருந்ததி ராய், ஏஜி நூர... மேலும் பார்க்க