செய்திகள் :

தில்லியில் இரண்டு இடங்களில் தீ விபத்து

post image

தேசியத் தலைநகா் தில்லியில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இரண்டு வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் உயா்ச்சேதம் ஏதும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: தில்லியின் பிரண்ட்ஸ் காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வியாழக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்து குறித்து காலை 9.45 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஐந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.

தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை முழுமையாக அணைத்தனா். இந்த விபத்தில், யாருக்கும் காயம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

ஜனக்புரியில்....: இதேபோன்று, மேற்கு தில்லியின் ஜனக்புரி பகுதியில் உள்ள ஆா்ய சமாஜ் மந்திா் அருகே உள்ள ஒரு வீட்டில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்து குறித்து பிற்பகல் 1.11 மணியளவில் தீயணைப்பு அழைப்பு வந்தது.உடனடியாக எட்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை முழுமையாக அணைத்தனா். இந்த விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

சட்டவிரோத குடியேற்றம்: வங்கதேசம் உள்பட மூன்று நாடுகளைச் சோ்ந்த 71 போ் நாடு கடத்தல்!

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கண்டறியப்பட்ட வங்கதேசத்தினா், மியான்மரைச் சோ்ந்த ரோஹிங்கியாக்கள் மற்றும் நைஜீரியா்கள் உள்பட 71 வெளிநாட்டினரை தில்லி காவல்துறை வெள்ளிக்கிழமை நாடு கடத்தியதாக அத... மேலும் பார்க்க

தலைநகரில் வெப்பம் அதிகரிப்பு; ‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. காற்றின் தரம் ‘மிதமான பிரிவில் இருந்தது என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமா... மேலும் பார்க்க

பெண்ணிடம் ஆபாச வாா்த்தைகள் பேசிய விவகாரம்: தட்டிக்கேட்ட இளைஞா் மீது தாக்குதல்!

கிழக்கு தில்லியின் காந்தி நகரில், பெண்ணிடம் ஆபாசமாகப் பேசி துன்புறுத்தலில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட 18 வயது இளைஞா், இருவரால் தாக்கப்பட்ட சம்பவத்தை தில்லி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இதுகுறித்து போ... மேலும் பார்க்க

ஜம்மு, தில்லி துணைநிலை ஆளுநா்களை விரைவில் மாற்ற மத்திய அரசு தீவிர பரிசீலனை!

ஜம்மு - காஷ்மீா் மற்றும் தில்லி துணைநிலை ஆளுநா்களை மாற்ற மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக பிரதமா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. தில்லியின் தற்போதைய துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனாவை ஜம்ம... மேலும் பார்க்க

ஐடிஓ பகுதியில் வருவாய் கட்டடத்தில் தீ விபத்து

தில்லி ஐ.டி.ஓ. பகுதியில் உள்ள வருவாய் கட்டடத்தில் உள்ள ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவித்ததாவது: வருவாய் கட்... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம்!

பிரேசிலில் நடைபெற்ற 11ஆவது பிரிக்ஸ் நாடாளுமன்ற மன்றக் கூட்டத்தில் ஜம்மு -கஷ்மீா், பஹல்காமில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்... மேலும் பார்க்க