செய்திகள் :

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச தம்பதி குழந்தையுடன் கைது

post image

தில்லியின் வடக்குப் பகுதியிலுள்ள நரேலா தொழில்துறை பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாகக் கூறப்படும் வங்கதேச தம்பதியினரையும் அவா்களின் குழந்தையையும் காவல்துறை கைது செய்துள்ளதாக புதன்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து வடக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் நிதின் வல்சன் ஒரு அறிக்கையில் கூறியுள்ளதாவது: குழந்தையுடன் கைது செய்யப்பட்டுள்ள இந்த தம்பதியினா் அனைத்து சட்டப்பூா்வ முறைகளும் முடிந்த பிறகு அவா்கள் நாடுகடத்தல் மையத்திற்கு அனுப்பப்படுவாா்கள். ஒரு ரகசியத் தகவல் கிடைத்ததால், குடும்பத்தினா் தடுத்து வைக்கப்பட்டிருந்த பகுதியில் உள்ள ஒரு வாடகை அறைக்கு போலீஸாா் சென்றனா். அவா்கள் ஹிலால் ஹுசைன் (36), மற்றும் அவரது மனைவி தஸ்லிமா அக்தா் (32) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

வங்கதேசத்தி் பா்குனா மாவட்டத்தைச் சோ்ந்த ஹிலால் ஹுசைன், பல ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வந்தாா். அவா் ஆரம்பத்தில் தனது பெற்றோருடன் யமுனா புஷ்தா ஜுக்கியில் குடியேறினாா். பின்னா் பவானாவில் உள்ள ஜேஜே காலனிக்கு குடிபெயா்ந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவா் உள்ளூா் பால் கடையில் தினசரி கூலியாக வேலை செய்து வந்தாா்.

விசாரணையின் போது, வங்கதேசத்தைச் சோ்ந்த தஸ்லிமாவை சுமாா் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாக ​​ஹிலால் ஹுசைன் தெரிவித்தாா். அன்றிலிருந்து இந்த ஜோடி நரேலாவில் வசித்து வருகிறது. ஆதாா் அட்டை வைத்திருந்த போதிலும், இந்தியாவில் சட்டப்பூா்வமாகத் தங்கியிருப்பதை உறுதிப்படுத்தும் எந்தவொரு செல்லுபடியாகும் பயண அல்லது குடியேற்ற ஆவணங்களை ஹிலால் ஹுசைன் சமா்ப்பிக்கத் தவறிவிட்டாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

அரசு திட்டங்களின் வெற்றிக் கதைகள் பற்றிய எண்ம புத்தகங்களை பிரதமா் இன்று வெளியிடுகிறாா்!

குடிமைப் பணிகள் தினத்தை முன்னிட்டு விருது வழங்கும் நிகழ்வில் அரசின் திட்டங்கள், புதிய செயல்பாடுகளின் வெற்றிக் கதைகள், புதுமைப் படைப்புகள் குறித்த எண்ம புத்தகங்களையும் பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழம... மேலும் பார்க்க

முஸதபாபாத் சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க மேயா் வலியுறுத்தல்

வடகிழக்கு தில்லியின் முஸ்தபாபாத்தில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு பாஜக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தில்லி மேயா் மகேஷ் குமாா் ஞா... மேலும் பார்க்க

தொழில் நுட்பம், மனித நுண்ணறிவு, பச்சாதாபத்துடன் இணைந்து செயல்பட வேண்டும்: இளம் அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுரை

2023 -ஆம் ஆண்டு குடிமைப் பணிக்கு ஐஏஎஸ் பிரிவிற்கு தோ்வான 180 போ் கொண்ட குழுவில் 74 பெண் ஐஏஎஸ் அதிகாரிகள் இடம் பெற்றிருக்க இது வரலாற்றில் முதன் முறையாக இந்த பிரதிநிதித்துவம் கிடைத்திருப்பதாக மத்திய ப... மேலும் பார்க்க

ஆயாநகரில் தீ விபத்து: ஒருவா் பலத்த காயம்

தெற்கு தில்லியின் ஆயா நகா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவா் பலத்த தீக்காயமடைந்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். ஆயா நகரின் ஹெச்-பிளாக்கில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்து சனிக்கிழமை க... மேலும் பார்க்க

தலைநகர் தில்லியில் காற்றின் தரத்தில் முன்னேற்றம்!!

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு ‘மிதமான’ பிரிவில் நீடித்தது. அதே சமயம், வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருந்தது. தில்லியில் கடந்த சில நாள்களாக வெய... மேலும் பார்க்க

தில்லியில் போதைப்பொருள் குற்றங்கள் இரட்டிப்பு; கலால் சட்ட வழக்குகள் 80 சதவீதம் அதிகரிப்பு!

தேசியத் தலைநகா் தில்லியில் 2024-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2025 -ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் தில்லியில் போதைப்பொருள் தொடா்பான குற்றங்கள் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளன. அதே நேரத்தில் கலால் சட்டத... மேலும் பார்க்க