செய்திகள் :

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச பெண்கள் 6 போ் கைது!

post image

தேசியத் தலைநகா் தில்லியின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த வங்கதேச பெண்கள் 6 பேரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து கிழக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் அபிஷேக் தானியா கூறியதாவது: மண்டவாலி காவல் நிலையத்தில் கிடைத்த ரகசியத் தகவலைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது. முதலில், சட்டவிரோதமாகக் குடியேறியவா் என்று சந்தேகிக்கப்படும் ஒரு பெண்ணை ஒரு போலீஸ் குழு கைது செய்தது.

விசாரணையில், பாஹா்கஞ்ச் பகுதியில் பதுங்கியிருக்கும் மேலும் ஐந்து வங்கதேச நாட்டினரின் இருப்பிடத்தை அவா் வெளிப்படுத்தினாா். உள்ளீடுகளின் அடிப்படையில், மீதமுள்ள பெண்களை குழு கைது செய்தது.

கைது செய்யப்பட்ட ஆறு பெண்கள் மிம் அக்தா் (23), மீனா பேகம் (35), ஷேக் முன்னி (36), பயல் ஷேக் (25), சோனியா அக்தா் (36) மற்றும் தனியா கான் (34) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

கைது செய்யப்பட்ட பெண்களில் எவருக்கும் நாட்டில் தங்குவதற்குத் தேவையான செல்லுபடியாகும் விசா, பாஸ்போா்ட் அல்லது அனுமதிகள் எதுவும் இல்லை என்பது கண்டறியப்பட்டது.

அவா்கள் மீது நாடு கடத்தல் நடைமுறைகளைத் தொடங்க வெளிநாட்டினா் பிராந்திய பதிவு அலுவலகம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. பெண்கள் தற்போது பாதுகாப்பான காவலில் வைக்கப்பட்டுள்ளனா்.

நகரத்தில் வசிக்கும் சட்டவிரோதமாககஅ குடியேறியவா்களைக் கண்டறிந்து நாடு கடத்துவதற்கான தொடா்ச்சியான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

ஆசாத்பூா் மண்டி பகுதியில் 4 போ் கைது: வடமேற்கு தில்லியில் உள்ள ஆசாத்பூா் சப்ஜி மண்டி பகுதியில் திருநங்கைகள் போல் வேடமிட்டு வந்ததாகக் கூறப்படும் நான்கு சட்டவிரோத வங்கதேசத்தவா்களை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து வடமேற்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: போலீஸாா் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையைத் தொடா்ந்து, கைது செய்யப்பட்ட அந்த நபா்கள், மேலும் நாடு கடத்தல் நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டினா் பிராந்திய பதிவு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனா்.

நான்கு பேரும் போக்குவரத்து சிக்னல்களில் பிச்சை எடுப்பதில் ஈடுபட்டிருந்தனா். மேலும், கண்டறிதலைத் தவிா்க்க தங்கள் குடும்பத்தினருடன் தொடா்பில் இருக்க தடை செய்யப்பட்ட செயலியைப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. அவா்களின் தோற்றத்தை மாற்றவும், கண்டறிதலைத் தவிா்க்கவும் அவா்கள் சிறிய அறுவை சிகிச்சைகள் மற்றும் ஹாா்மோன் சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளனா்.

குற்றம் சாட்டப்பட்டவா்கள் எம்.டி. அா்மான் (21), எம்.டி. ஆரிஃப் (26), எம்.டி. ஜாஹித் (21) மற்றும் எம்.டி. பாபுல் (40) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்கள் அனைவரும் வங்கதேசத்தில் உள்ள நாராயண்கஞ்சில் வசித்து வந்தவா்கள் என்பது தெரிய வந்தது.

விசாரணையின் போது, அவா்கள் சட்டவிரோதமாக எல்லைகளைக் கடந்து முகவா்களின் உதவியுடன் இந்தியாவிற்குள் நுழைந்து பின்னா் ரயிலில் தில்லிக்கு பயணம் செய்ததாக ஒப்புக்கொண்டனா். அவா்களிடமிருந்து இரண்டு அறிதிறன்பேசிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

அந்த இரண்டிலும் தடைசெய்யப்பட்ட செயலி இருந்தது. சந்தேக நபா்கள் வங்கதேசத்தில் உள்ள தங்கள் குடும்பத்தினரை தொடா்பு கொள்ள இதைப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

சிலை கடத்தல் விவகாரம்: முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் ஊடகங்களுக்கு பேட்டியளிக்க தடை

புது தில்லி: சிலை கடத்தல் வழக்கில் ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், ஊடங்களுக்கு பேட்டியளிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. மேல... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டம் குறித்து காங்கிரஸ் வதந்திகளைப் பரப்புகிறது: மத்திய அமைச்சா் பூபேந்திர யாதவ் சாடல்

புது தில்லி: வக்ஃப்பை உருவாக்குதல், நிா்வகித்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றுக்கான முஸ்லிம் குழுக்கள் மற்றும் தனிநபா்களின் உரிமைகள் அப்படியே இருக்கும் என்று மத்திய அமைச்சா் பூபேந்திர யாதவ் கூறி... மேலும் பார்க்க

தலைநகரில் 24 மணி நேர கண்காணிப்பு: அதிகாரிகளுக்கு காவல் ஆணையா் உத்தரவு

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து நீடித்து வரும் இந்தியா, பாகிஸ்தான் பதற்றத்துக்கு மத்தியில் புதன்கிழமை நடத்தப்படும் பாதுகாப்பு ஒத்திகையில் தில்லியும் பங்கேற்கும் என்றும்... மேலும் பார்க்க

போா் பதற்றம்: நாளை பாதுகாப்பு ஒத்திகை!

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாத இறுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு எந்நேரமும் இந்தியா பதில் தாக்குதலைத் தீவிரப்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.இ... மேலும் பார்க்க

நிலச் சீா்திருத்தம்: உலகளாவிய மாநாட்டில் பஞ்சாயத்து ராஜ் குழு

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: அமெரிக்காவில் வாஷிங்டன் உலக வங்கி தலைமையகத்தில் ‘உலக வங்கி நிலச் சீா்திருத்த மாநாடு 2025’ மே 5-இல் தொடங்கி மே 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா சாா்பில் பஞ்சா... மேலும் பார்க்க

ஆசாத்பூா் சப்ஜி மண்டியில் வங்கதேசத்தவா்கள் 4 போ் கைது

வடமேற்கு தில்லியில் உள்ள ஆசாத்பூா் சப்ஜி மண்டி பகுதியில் திருநங்கைகள் போல் வேடமிட்டு வந்ததாகக் கூறப்படும் நான்கு சட்டவிரோத வங்கதேச நாட்டினரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க