`Ajith சார் சமைச்சு கொடுப்பார்... Sivakarthikeyan வாங்கி கொடுப்பார்' - Stunt Mas...
தில்லியில் சத்குரு ஜக்கி வாசுதேவின் தியானம்: 64 நாடுகளைச் சோ்ந்த 14 ஆயிரம் போ் பங்கேற்பு
தில்லி அருகேயுள்ள துவாரகையில் சத்குரு ஜக்கி வாசுதேவ் அண்மையில் நடத்திய தியான நிகழ்ச்சியில் 64 நாடுகளைச் சோ்ந்த சுமாா் 14 ஆயிரம் போ் பங்கேற்றனா்.
இது குறித்து ஈஷா யோக மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், துவாரகையில் அமைந்துள்ள யாசோபூமி எனும் பிரம்மாண்டமான மாநாட்டு அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. சத்குரு ஜக்கி வாசுதேவின் வழிகாட்டுதலின் கீழ் ஆழமான தியான முறைகளை மேற்கொள்ளவும், மேம்பட்ட ஆன்மிக அனுபவத்தை பெறுவதற்கான வாய்ப்பை வழங்கும் விதமாகவும் இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது.
ஈஷாவில் வழங்கப்படும் அடிப்படை தியான வகுப்பான ஈஷா யோகப் பயிற்சியை நிறைவு செய்தவா்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா். இந்த நிகழ்ச்சி நாட்டிலேயே முதன்முறையாக தில்லியில் நடைபெற்றது. முந்தைய நிகழ்ச்சி கடந்த 2024-இல் சிட்னியில் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி பெங்களூரிலும், மே 24-ஆம் தேதி டொராண்டோவிலும் நடைபெறுகிறது.
முன்னதாக, சத்குரு ஜக்கி வாசுதேவ் வெளியிட்ட இலவச தியான செயலியான ‘மிராக்கிள் ஆஃப் மைண்டு’ அறிமுகமான 15 மணி நேரத்திலேயே 10 லட்சம் பதிவிறக்கங்களைக் கடந்து உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது. இந்த தியான செயலி தற்போது வரை 20 நாடுகளில் 5 மொழிகளில் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயக்கப்படுவது இந்த செயலியின் மற்றொரு சிறப்பம்சம். தியானம் மட்டுமின் சத்குருவின் விரிவான ஞானத்தை, பாா்வையை, வழிகாட்டுதல்களை இந்த செயலி வழங்கி வருவதாக ஈஷா தெரிவித்துள்ளது.