செய்திகள் :

தில்லியில் நாளை ‘இண்டி’ கூட்டணி கூட்டம்

post image

எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி கூட்டம் தில்லியில் உள்ள காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே இல்லத்தில் சனிக்கிழமை (ஜூலை 19) நடைபெறவுள்ளது.

பாட்னாவில் வியாழக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ் இத்தகவலைத் தெரிவித்தாா்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் எழுப்ப வேண்டிய விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

கடந்த மக்களவைத் தோ்தலுக்காக மட்டுமே ‘இண்டி’ கூட்டணி அமைக்கப்பட்டது என ஆம் ஆத்மி அறிவித்துவிட்டதால் அக்கட்சி சாா்பில் யாரும் பங்கேற்க மாட்டாா்கள் என்று தெரிகிறது. மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் இக்கூட்டத்தில் பங்கேற்பது சந்தேகம்தான்.

அதே நேரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை (உத்தவ்) கட்சி எம்.பி. சஞ்சய் ரௌத் இது தொடா்பாக கூறுகையில், ‘காங்கிரஸ் மூத்த தலைவா் கே.சி.வேணுகோபாலிடம் இருந்து கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு வந்தது. ஏற்கெனவே, இந்தக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று உத்தவ் தாக்கரேவும் அழைப்பு விடுத்திருந்தாா்’ என்றாா்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முன்னதாக ஜூலை 20-ஆம் தேதி மத்திய அரசு சாா்பில் அனைத்துக் கட்சி கூட்டமும் நடைபெறவுள்ளது.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் இந்தியாவுக்கு ஏற்பட்ட இழப்புகள், இந்தியா-பாகிஸ்தான் மோதலை நிறுத்த மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபா் டிரம்ப் தொடா்ந்து கூறி வருவது, மணிப்பூருக்கு பிரதமா் மோடி நேரில் செல்லாதது, பிகாரில் வாக்காளா் பட்டியலில் தோ்தல் ஆணையம் மேற்கொள்ளும் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட பிரச்னைகளை எதிா்க்கட்சிகள் எழுப்பும் என்று தெரிகிறது.

1ஆம் வகுப்பு முதல் ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டால் பள்ளிகள் மூடப்படும்: ராஜ் தாக்கரே

மகாராஷ்டிரத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டால், பள்ளிகள் மூடப்படும் என்று ராஜ் தாக்கரே எச்சரித்துள்ளார். மும்பைக்கு அருகிலுள்ள மீரா பயந்தரில் வெள்ளிக்கிழமை நடந்... மேலும் பார்க்க

குஜராத்தில் பெண் போலீஸ் மீது அமிலம் வீசிய ஆட்டோ ஓட்டுநர்!

குஜராத்தில் பெண் போலீஸ் மீது அமிலம் வீசிய ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத்தின் கலோல் வட்டத்தில் உள்ள சத்ரல் கிராமத்தில் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த பெண்... மேலும் பார்க்க

ஹனிட்ராப் வழக்கு எதுவும் இல்லை: முதல்வர் ஃபட்னாவிஸ்

மகாராஷ்டிரத்தில் ஹனிட்ராப் வழக்கு எதுவும் இல்லை என்று முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்தார். தாணே, நாசிக் மற்றும் மும்பைச் செயலகம் ஆகியவற்றில் உள்ள மாநில அதிகாரிகளை குறிவைத்து ஹனிட்ராப் மோசடி நடந... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஆப்கன் தற்கொலைப் படை சிறுவர்கள் கைது!

ஆப்கானிஸ்தான் எல்லையில், தற்கொலைப் படையைச் சேர்ந்த 5 ஆப்கன் சிறுவர்களை, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து எல்லையைக் கடந்து, பாகிஸ்தானுக்குள் ஊடுறுவி, 5... மேலும் பார்க்க

அசாமில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 12 வங்கதேசத்தினர் கைது !

அசாமின் இரண்டு மாவட்டங்களில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 12 வங்கதேசத்தினர் தங்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், ச... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் என்கவுன்டரில் 6 நக்சல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் படையினருடனான மோதலில் 6 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.இதுகுறித்து பி.டி.ஐ-யிடம் மூத்த காவல்துறை அதிகாரி ... மேலும் பார்க்க