செய்திகள் :

தில்லி கல்லூரி வகுப்பறையில் சாணம் பூசப்பட்ட விவகாரம்: பழிவாங்கிய மாணவத் தலைவர்!

post image

தில்லியிலுள்ள ஒரு கல்லூரியின் வகுப்பறையின் சுவரில் மாட்டுச் சாணம் பூசப்பட்ட நிலையில் அந்தக் கல்லூரியின் முதல்வரின் அறையிலும் மாட்டுச் சாணம் பூசப்பட்டுள்ளது.

தில்லி அரசின் கீழ் செயல்பட்டு வரும் லக்‌ஷ்மி பாய் கல்லூரியின் முதல்வரான பிரத்யூஷா வட்சலா என்பவர் கடந்த ஏப்.13 அன்று அங்குள்ள வகுப்பறையைக் குளிர்விப்பதாகக் கூறி அதன் சுவர்களில் மாட்டுச் சாணத்தைப் பூசியுள்ளார்.

இதனைப் பாரம்பரிய முறைப்படி குளிர்விக்கும் திட்டம் எனக் கூறி அந்த கல்லூரி முதல்வர் தலைமையிலான ஊழியர்கள் இந்தச் செயலில் ஈடுபடும் விடியோ இணையத்தில் வைரலானது.

இந்த விவகாரம் குறித்து ஏராளமானோர் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், தில்லி பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவரான ரோனாக் காத்ரி என்பவர் முதல்வர் பிரத்யூஷாவின் அலுவலக அறையின் சுவர்களில் மாட்டுச் சாணத்தை பூசியுள்ளார்.

இதுகுறித்த விடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த அவர், எங்களுக்கு முதல்வரின் செயல் மீது முழு நம்பிக்கையுள்ளது எனவும் இனி அவர் தனது அறையிலுள்ள குளிரூட்டிகளை விலக்கி, மாட்டுச் சாணத்தைப் பூசி குளிரூட்டிக்கொள்வார் எனக் கூறியுள்ளார்.

ஆனால், தனது செயல் குறித்து முதல்வர் பிரத்யூஷா கூறுகையில், இந்தச் சம்பவம் அந்தக் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர்ச்சியான ஆய்வின் ஒரு பகுதி மட்டுமே என்றும் ஒரு வாரம் கழிந்த பின்னரே இந்த ஆய்வின் முடிவுகளை தன்னால் பகிர முடியும் எனவும் கூறியுள்ளார்.

மேலும், முழுவதுமாக அறியாமல் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டிய அவர் இயற்கையான மண்ணைத் தொடுவதில் எந்தவொரு ஆபத்தும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, இந்தச் சம்பவம் குறித்த விடியோவை வாட்ஸ் ஆப் குழுவில் பகிர்ந்த அவர் அந்த வகுப்பறையிலிருந்த மாணவர்களுக்கு புதிய அறை ஒதுக்கப்படும் எனவும் உங்களது கல்லூரி அனுபவத்தை இனிமையாக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க:தஹாவூா் ராணாவிடம் தினமும் 8 மணி நேரத்துக்கு மேல் என்ஐஏ விசாரணை

மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் பிரதிநிதித்துவம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினராக வகைசெய்யும் அரசினர் திருத்தச் சட்டமுன்வடிவுகளை பேரவையில் அறிமுகம் செய்வதில் வா... மேலும் பார்க்க

பெண் தற்கொலை சம்பவம்: உதவி ஆய்வாளர்கள், பெண் தலைமைக் காவலர் பணியிட மாற்றம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே அண்ணன் கைது செய்யப்பட்டதால், காவல் நிலையம் முன் விஷம் குடித்த தங்கை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நடுக்காவேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் 2 பேர், பெண் தலைமைக் காவலர் பணியிட மா... மேலும் பார்க்க

சத்தீஸ்கர் என்கவுன்டரில் 2 நக்சல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரின் கொண்டகான்-நாராயண்பூர் எல்லை அருகே நடந்த என்கவுன்டரில் இரண்டு நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.பஸ்தர் காவல் துறை தலைவா் பி.சுந்தர்ராஜ் கூறுகையில், கொண்டகான்-நார... மேலும் பார்க்க

மீண்டும் ரூ.70 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை(ஏப்.16) அதிரடியாக சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.70,520-க்கு விற்பனையாகிறது. சென்னையில் தங்கம் விலை கடந்த இரண்டு நாள்களாக சிறிதளவில் குறைந்து வந்த தங்கத்தின்... மேலும் பார்க்க

ஜம்மு காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.4 ஆகப் பதிவு

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் புதன்கிழமை அதிகாலை 2.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் வெளியிட்ட ... மேலும் பார்க்க

திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவு

திபெத்: சீனாவில் தொலைதூர இமயமலைப் பகுதியான திபெத்தில் புதன்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.முன்னதாக, திபெத்தின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 10 கி.மீ. ஆழ... மேலும் பார்க்க