செய்திகள் :

'தமிழக அரசிடமிருந்து ஊதியம் வேண்டாம்'- மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் குழு தலைவர் குரியன் ஜோசப்

post image

மாநில உரிமைகளை மீட்டெடுக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தமிழக அரசிடமிருந்து ஊதியம் பெற மாட்டேன் என்று தெரிவித்திருகிறார்.

சட்டப்பேரவையில் ஸ்டாலின்
ஸ்டாலின்

சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின், 'மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்தவும், மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும் தேவையான ஆலோசனைகள், பரிந்துரைகளை வழங்க நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் ஒரு உயர்நிலை குழு அமைக்கப்படுகிறது.

இந்த குழுவில் அசோக் வர்தன் ஷெட்டி, பேராசிரியர் நாகநாதன் ஆகியோர் இடம் பெறுவார்கள். இந்த குழு ஜனவரி மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யும்' என அறிவித்தார்.

இந்நிலையில் குழு தலைவராக நியமிக்கப்பட்டது குறித்துப் பேசிய குரியன் ஜோசப், “ஒன்றிய - மாநில அரசுகளின் நிதி சார்ந்த கொள்கைகள், நிர்வகிக்கும் அதிகாரங்கள் குறித்து ஆய்வு செய்வது காலத்தின் கட்டாயம். இதற்கு என்னைத் தேர்வு செய்ததைப் பெருமையாகக் கருதுகிறேன்.

குரியன் ஜோசப்
குரியன் ஜோசப்

இந்தப் பணிக்காக எந்த ஊதியமும் பெற மாட்டேன் என முதலமைச்சர் ஸ்டாலினிடம் வேண்டுகோளாக முன்வைத்தேன். அவரும் அதை ஏற்றுக்கொண்டார்" என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

`சாட்டை சேனலுக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை' - அறிக்கை வெளியிட்ட சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அந்தக் கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் நடத்திவரும் சாட்டை என்ற யூடியூப் சேனலுக்கும் தங்கள் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை எ... மேலும் பார்க்க

மாநில சுயாட்சி தீர்மானம் : ADMK - BJP வெளிநடப்பு! | NDA -ல் தேமுதிக? DMK | Imperfect show 15.4.2025

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* மாநில சுயாட்சி - தீர்மானம் கொண்டுவந்த முதல்வர்?* சட்டமன்றம்: முதல்வர் பேசுகையில் அதிமுக வெளிநடப்பு செய்தது ஏன்?* சட்டமன்றம் சுவாரஸ்யங்கள்!* பாமகவில் சின்ன சலசலப்புதான்.... மேலும் பார்க்க

`எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு'- கொலை மிரட்டல் விடுத்ததாக அதிமுக ஒ.செ மீது புகார்- என்ன நடந்தது?

ஒரத்தநாடு அருகே உள்ள நெடுவாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த வசந்த், கள்ளர் படைப்பற்று நலசங்கத்தின் மாநிலத் தலைவர். இவர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசி அது குறித்த ஆடியோவை வாட்ஸ் அப் குரூப்பில் ... மேலும் பார்க்க

`உசுர கையில பிடிச்சிட்டு ரோட்டைக் கடக்குறோம்'- குடிநீர் பிரச்னையால் சிரமப்படும் சிக்கனம்பட்டி மக்கள்

சேலம், காடையாம்பட்டி தாலுகா சிக்கனம்பட்டி ஊராட்சியில் சாலையின் ஒருபக்கம் 100 குடும்பங்களும், இன்னொரு பக்கம் ரோஜா நகரில் 20 குடும்பங்களும் உள்ளன.இந்த 100 குடும்பங்களுகிறது. ரோஜா நகரில் உள்ள குடும்பங்கள... மேலும் பார்க்க

மாணவர்களிடம் மதம் சார்ந்த கோஷம் : ஆளுநருக்கு எதிராக கொந்தளிக்கும் பள்ளி கல்லூரி ஆசிரியர் சங்கங்கள்

மதுரையில் கல்லூரி மாணவர்களை கட்டாயப்படுத்தி ஜெய் ஸ்ரீராம் கோஷமிட வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டுமென்று பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.ஆளுநர் ரவி | Republic Day'கல்விக்கூடங்... மேலும் பார்க்க

வாணியம்பாடி: நகராட்சிக் கழிவறையின் அவலநிலை... அவசரத்துக்கு அல்லாடும் மக்கள்!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரம், தோல் தொழிற்சாலைகள் நிறைந்த நெரிசல் மிகுந்த நகராட்சி ஆகும் . பெருகிவரும் மக்கள்தொகை மற்றும் வாகனங்களால் வாணியம்பாடி பேருந்து நிலையம் எப்போதும் நெரிசல் மிகுந்த... மேலும் பார்க்க