செய்திகள் :

தில்லி கேபிடல்ஸ் பயிற்சியாளராக முன்னாள் இங்கிலாந்து பயிற்சியாளர்!

post image

தில்லி கேபிடல்ஸ் அணிக்கு உதவிப் பயிற்சியாளரை அந்த அணி நிர்வாகம் இன்று (பிப்ரவரி 25) நியமித்துள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது.

ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் தங்களது பயிற்சியை விரையில் தொடங்கவுள்ளனர். அணி நிர்வாகங்கள் தங்களது அணிகளுக்கான பயிற்சியாளர்கள் மற்றும் உதவிப் பயிற்சியாளர்களை நியமிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இதையும் படிக்க: இந்தியாவின் பி டீமை வீழ்த்துவதும் பாகிஸ்தானுக்கு கடினம்: முன்னாள் இந்திய கேப்டன்

உதவிப் பயிற்சியாளர் நியமனம்

விரையில் ஐபிஎல் தொடங்கவுள்ள நிலையில், தில்லி கேபிடல்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக இங்கிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் மேத்யூ மோட் இன்று (பிப்ரவரி 25) நியமிக்கப்பட்டுள்ளார்.

51 வயதாகும் மேத்யூ மோட் தில்லி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹேமங் பதானி, தில்லி அணியின் இயக்குநர் வேணுகோபால் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் முனாஃப் படேலுடன் இணைந்து தில்லி கேபிடல்ஸ் அணிக்கு பயிற்சியளிக்க உள்ளார்.

ஐபிஎல் தொடரின் முதல் இரண்டு சீசன்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக மேத்யூ மோட் செயல்பட்டுள்ளார்.

இதையும் படிக்க: கொல்கத்தா அணியை வழிநடத்த தயாராக இருக்கிறேன்: வெங்கடேஷ் ஐயர்

ஐபிஎல் தொடரில் முதல் கோப்பைக்கான தேடலில் உள்ள தில்லி கேபிடல்ஸ் அணி, இந்த சீசனுக்காக அந்த அணியில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்குக்கு பதிலாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹேமங் பதானி தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டர்.

அதேபோல, பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வந்த முன்னாள் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஹோப்புக்குப் பதிலாக முன்னாள் இந்திய வீரர் முனாஃப் படேல் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். தற்போது, மேத்யூ மோட் உதவிப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் வருகிற மார்ச் 24 ஆம் தேதி தனது முதல் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணி லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தில்லி அசத்தல் பந்துவீச்சு: குஜராத் ஜெயண்ட்ஸ் 127 ரன்கள் சேர்ப்பு!

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற தில்லி அணியின் கேப்டன் மெக்-லானிங் முதலில் பந்துவீசுவதா... மேலும் பார்க்க

இந்திய அணிக்கு சுயதிருப்தி தேவையில்லை..! பிசிசிஐ செயலாளர் பேட்டி!

இந்திய அணி பெரிய போட்டிகளுக்காக தயாராக இருக்க வேண்டுமென பிசிசிஐ செயலாளர் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக இருந்த ஜெய் ஷா, தற்போது சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்... மேலும் பார்க்க

சர்வதேச கிரிக்கெட்டில் மிகப் பெரிய வீரராக உருவெடுக்கும் ஷுப்மன் கில்: ஹாசிம் ஆம்லா

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஷுப்மன் கில் மிகப் பெரிய வீரராக உருவெடுக்க உள்ளதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஹாசிம் ஆம்லா தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஷுப... மேலும் பார்க்க

திடலில் அத்துமீறி நுழைந்தவருக்கு வாழ்நாள் தடை..! பாதுகாப்பை பலப்படுத்தும் பாகிஸ்தான்!

ராவல்பிண்டி திடலில் அத்துமீறி நுழைந்த நபரால் சாம்பியன்ஸ் டிராபியில் பாதுகாப்பை பலப்படுத்த பிசிபி முடிவெடுத்துள்ளது.சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) நடத்துகின்றன. நடப... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: ஆஸி.-தெ.ஆ. போட்டி ரத்து!

சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸி. தெ.ஆ. போட்டி மழையினால் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ராவல்பிண்டியில் நடைபெறவிருந்த 7ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணி... மேலும் பார்க்க

ஆஸி. - தெ.ஆ. போட்டி ரத்தானால் அரையிறுதிக்கு தகுதிபெறுவதில் சிக்கல்!

சாம்பியன்ஸ் டிராபியில் மழையின் காரணமாக ஆஸி.-தெ.ஆ. ஆட்டம் தொடங்கபடவில்லை என்பதால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ராவல்பிண்டியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் ஆஸ... மேலும் பார்க்க