செய்திகள் :

தில்லி சட்டப்பேரவை கூட்டத்தில் முதல் விவாதம் இதுதான்! பாஜக அறிவிப்பு

post image

தில்லி சட்டப்பேரவை கூட்டத்தில் முதலில் விவாதிக்கப்படவுள்ள பிரச்னை குறித்து பாஜக அறிவித்துள்ளது.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக, 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான அமைச்சரவை வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டது.

தொடர்ந்து, தில்லி அமைச்சரவைக் கூட்டத்தில் தேசிய பொது சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும், கடந்த 14 ஆண்டுகளாக தாக்கல் செய்யப்படாமல் இருந்த அரசின் செயல்திறன் குறித்த தலைமை கணக்கு தணிக்கையாளர்(சிஏஜி) அறிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதையும் படிக்க : போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்குக்கு ஒத்திகையா?

இதனிடையே, பாஜக சார்பில் சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கு விஜேந்தர் குப்தா போட்டியிடுவார் என்று கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விஜேந்தர் குப்தா செய்தியாளர்களுடன் வெள்ளிக்கிழமை பேசியதாவது:

”தில்லி சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் வருகின்ற பிப். 24, 25 மற்றும் 27ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. துணைநிலை ஆளுநரால் நியமிக்கப்படும் தற்காலிக பேரவைத் தலைவரால் முதல் நாளில் 70 உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படும்.

தொடர்ந்து, சட்டப்பேரவைத் தலைவரும் துணைத் தலைவரும் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதன்பிறகு முதல் பணியாக 14 சிஏஜி அறிக்கைகளும் தாக்கல் செய்யப்படும். அதுகுறித்து உறுப்பினர்கள் விவாதம் நடத்துவார்கள்” எனத் தெரிவித்தார்.

அரசை மகிமைப்படுத்துவதற்கு பொதுப்பணம் எதுவும் செலவிடப்படாது: பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா உறுதி

தேசியத் தலைநகரில் அரசையோ, முதல்வரையோ அல்லது கட்சியையோ மகிமைப்படுத்துவதற்கு பொதுப் பணத்தில் ஒரு பைசா கூட செலவிடப்படாது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறினாா். தில்லியில் வெள்ளிக்கிழமை செய... மேலும் பார்க்க

ஆட்டோ, பாா்மா பங்குகள் அதிகம் விற்பனை: நான்காவது நாளாக வீழ்ச்சி!

நமது நிருபா் இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட... மேலும் பார்க்க

மொழித் திணிப்பு எதுவும் இல்லை: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

நமது சிறப்பு நிருபா் மாணவா்களின் நலனுக்காக அரசியல் வேறுபாடுகளைக் கடந்து செயலாற்றுமாறு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் வலியுறுத்த... மேலும் பார்க்க

வியத்நாமில் உலக் தமிழா் மாநாடு

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு வியத்நாமில் உலகத் தமிழா் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இது தொடா்பாக தில்லித் தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: உலக தாய்மொழி தினத்தை முன... மேலும் பார்க்க

தில்லி சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக அா்விந்தா் சிங் லவ்லி அறிவிப்பு

தில்லி சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக அா்விந்தா் சிங் லவ்லியை பாஜக எம்எல்ஏவும் தில்லி சட்டப்பேரவை முன்னாள் எதிா்க்கட்சித் தலைவருமான விஜேந்தா் குப்தா வெள்ளிக்கிழமை அறிவித்தாா். தற்காலிக பேரவைத் தலைவ... மேலும் பார்க்க

சங்கம் விஹாரில் இளைஞருக்கு கத்திக்குத்து: சிறுவன் உள்பட இருவா் கைது

தெற்கு தில்லியின் சங்கம் விஹாா் பகுதியில் 19 வயது இளைஞா் கத்தியால் குத்தப்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: சங்கம் விஹாரில்... மேலும் பார்க்க