செய்திகள் :

தில்லி தேர்தல்: ஆம் ஆத்மியின் 7 எம்.எல்.ஏ.க்கள் திடீர் விலகல்!

post image

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் ஆம் ஆத்மி கட்சியின் 7 எம்.எல்.ஏ.க்கள் ஒரே நேரத்தில் பதவி விலகியுள்ளனர்.

தில்லியின் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக வருகின்ற பிப்.5 அன்று நடைபெறவுள்ளது. தேர்தல் நடைபெற வெறும் 5 நாள்களே உள்ள சூழலில் இம்முறை வாய்ப்பு மறுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் 7 பேர் ஒரே நேரத்தில் தங்களது பதவியை ராஜிநாமா செய்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிஜ்வாஸன் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான பிஎஸ் ஜூன் முதலில் தனது ராஜிநாமா கடிதத்தை சமர்பித்தார். அவரைத் தொடர்ந்து, நரேஷ் குமார் யாதவ் (மெஹரௌலி), ரோஹித் குமார் (திரிலோக்புரி), ராஜேஷ் ரிஷி (ஜானக்புரி), மதன் லால் (கஸ்துரிபா நகர்), பவன் ஷர்மா (ஆதார்ஷ் நகர்) மற்றும் பாவனா கவுட் (பாலம்) ஆகியோர் தங்களது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்து கடிதத்தை சமர்பித்துள்ளனர்.

திடீரென எடுக்கப்பட்ட இந்த முடிவு குறித்து 7 பேரில் ஒருவரான பாவன கவுட் தனது ராஜிநாமா கடிதத்தில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கேஜரிவாலின் மீதிருந்த நம்பிக்கையை தான் முழுவதுமாக இழந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: ஈரானில் 3 இந்தியர்கள் மாயம்!

மேலும், பதவி விலகிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் ஆம் ஆத்மி கட்சி அதன் கொள்கைகளை மீறி செயல்பட்டு ஊழல் மற்றும் வாரிசு அரசியலில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

முன்னதாக, தற்போது பதவி விலகிய தில்லி சட்டப்பேரவை உறுப்பினர்கள் 7 பேருக்கும் இம்முறை போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டு அவர்களது தொகுதிகளில் போட்டியிட புதிய வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதில், மெஹரௌலி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான நரேஷ் யாதவ் திருக்குரானை அவமதித்த வழக்கில் அவருக்கு பஞ்சாப் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்கா: புதியதாக மூன்று குரங்கு அம்மை பாதிப்பு கண்டுபிடிப்பு!

தென் ஆப்பிரிக்கா நாட்டில் மூன்று புதிய குரங்கு அம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்க சுகாதாரத் துறையின் செய்தி தொடர்பாளர் ஃபோஸ்டர் மொஹாலே கூற... மேலும் பார்க்க

மசூதியில் குண்டு வெடிப்பு: தலைமை இமாமை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்!

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்குவா மாகாணத்திலுள்ள மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. கைபர் பக்துன்குவாவின் மொந்ஷேரா மாவட்டத்திலுள்... மேலும் பார்க்க

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு!

ஹரியாணா மாநிலம் அம்பலா மாவட்டத்திலுள்ள நீதிமன்றத்தின் வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அம்பலா மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (மார்ச்.1) வழக்கு விசாரணைக்காக ஒரு நபர் ஆஜராகியுள்ளார். அப்போது... மேலும் பார்க்க

அசாம்: ரூ.2.2 கோடி போதைப் பொருள் பறிமுதல்! 2 பேர் கைது!

வடகிழக்கு மாநிலமான அசாமில் ரூ.2.2 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 2 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா தெரிவித்துள்ளார்.சாச்சார் மாவட்டத்தில... மேலும் பார்க்க

பக்ரீத் பண்டிகைக்கு ஆடுகள் பலியிடுவதைத் தவிர்க்க வேண்டும்! மக்களுக்கு அரசர் வலியுறுத்தல்!

மொராக்கோவில் பக்ரீத் பண்டிகையின்போது ஆடுகள் பலியிடப்படுவதை மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என அந்நாட்டு அரசர் வலியுறுத்தியுள்ளார். வடக்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் கடந்த 7 ஆண்டுகளாக வறட்சியான சூழ... மேலும் பார்க்க

பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்த நபர் சுட்டுப்பிடிப்பு!

பஞ்சாப் மாநிலத்தில் மக்களிடம் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்தவரை காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்துள்ளனர். பஞ்சாபின் மொஹாலி மாவட்டத்திலுள்ள காகார் பாலத்தின் அருகில் கோல்டி ப... மேலும் பார்க்க