செய்திகள் :

தில்லி பல்கலை.யில் கூடுதல் சுற்று: மாணவர் சேர்க்கை தொடக்கம்

post image

தில்லி பல்கலைக்கழகம் இளங்கலைப் படிப்புகளுக்கான நேரடி கூடுதல் சுற்று (மாப்-அப்) மாணவர் சேர்க்கையைத் தொடங்கியுள்ளது.

முதல் நாளில் 73 பிஏ ஹானர்ஸ் இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஓபிசி (இதர பிற்படுத்தப்பட்டோர்) மற்றும் முன்பதிவு செய்யப்படாத (யுஆர்) மாணவர்கள் தவிர அனைத்து ஒதுக்கப்பட்ட பிரிவுகளுக்கும் செவ்வாய்க்கிழமை சேர்க்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தில்லி பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியது:1 ,700 இடங்களுக்கு சுமார் 876 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். ஆனால், 73 பேர் மட்டுமே சேர்க்கப்பட்டனர்.

பல சுற்று சேர்க்கை இருந்தபோதிலும், மாற்றுத்திறனாளிகள் மாணவர்களுக்கான சுமார் 2,000 இடங்கள் உள்பட பல்வேறு பிரிவுகளில் சுமார் 7,000 இடங்கள் காலியாக உள்ளன.

பிஏ ஹானர்ஸ் படிப்புகளுக்காக, புதன்கிழமை சுமார் 2,600 யுஆர் மற்றும் ஓசிபி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பி.காம் மற்றும் பொருளாதாரப் படிப்புகளுக்கான சேர்க்கை வியாழக்கிழமை நடைபெறும். அறிவியல் பாடங்களுக்கான சேர்க்கை மறுநாள் நடைபெறும். மாப்-அப் சுற்று செப்டம்பர் 29 ஆம் தேதி முடிவடையும்.வழக்கமான சேர்க்கைகளைப் போல் இன்றி, மாப்-அப் சுற்று க்யூட் (பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு) மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டது அல்லாமல், 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டதாகும்.

செப்டம்பர் 29 ஆம் தேதிக்குப் பிறகு காலியாக உள்ள இடங்கள் இந்த அமர்வில் நிரப்பப்படாமல் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

உ.பி.யில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை:3 பேர் கைது

தில்லி காவல்துறை மாநிலங்களுக்கு இடையேயான சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கடத்தலை முறியடித்து, உத்தர பிரதேசம் மொரதாபாதில் ஒரு ஆயுத உற்பத்திப் பிரிவையும் கண்டுபிடித்ததாக அதிகாரி ஒருவர் தெரிவி... மேலும் பார்க்க

ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளர் கைது

வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபரிடம் ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்ற தில்லி காவல் துறை உதவி ஆய்வாளர் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். கைதான உதவி ஆய்வாளர் கரம்வீர் சிங், துவாரகாவில்... மேலும் பார்க்க

சுபாஷ் பிளேஸ் கொள்ளை சம்பவம்: முக்கிய நபர் கைது

தில்லி சுபாஷ் பிளேஸ் பகுதியில் உள்ள நகைக் கடையில் விற்பனையாளரைக் கத்தியால் குத்தி ரூ.50 லட்சம் மதிப்புடைய நகைகளைக் கொள்ளையடித்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபரை தில்லி காவல் துறையின் சிறப்புப் பிர... மேலும் பார்க்க

நவராத்திரி ஊர்வலத்தில் கத்திக் குத்து சம்பவம்: சிறுவன் உள்பட இருவர் கைது

மத்திய தில்லியில் நடைபெற்ற நவராத்திரி ஊர்வலத்தின்போது இரு குழுக்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதாக போலீஸார் புதன்கிழமை தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 17 வயது ச... மேலும் பார்க்க

காவலர் மீது துப்பாக்கிச் சூடு : சிறுவன் கைது

வடகிழக்கு தில்லியின் நந்த் நகரியில் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸôர் மீது துப்பாக்கியால் சுட்ட 16 வயது சிறுவன் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வரு... மேலும் பார்க்க

ஓக்லா கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் செப்.30-இல் திறப்பு: ஆசியாவில் மிகப் பெரியது

ஓக்லாவில் புதிதாகக் கட்டப்பட்ட 12.4 கோடி காலன் கொள்ளவு கழிவு நீரை சுத்திகரிக்கும் திறன்கொண்ட நிலையத்தின் திறப்பு விழா செப்.30-ஆம் தேதி நடைபெறுகிறது. இதைச் சிறப்பாக நடத்தும் பணியில் தில்லி ஜல் போர்டு த... மேலும் பார்க்க