செய்திகள் :

தில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்: பலி எண்ணிக்கை 18

post image

தில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவுக்குச் செல்லும் ரயில்களில் பயணிக்க அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடியதாலும், சில விரைவு ரயில்கள் வர தாமதமானதாலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி பலர் படுகாயமடைந்துள்ளனர்.

பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் கும்பமேளாவில் பங்கேற்ற மக்கள் பலர், தில்லி ரயில் நிலைய நடைமேடை 14-ல் காத்திருந்தனர்.

ஸ்வதந்திர சேனானி ரயில் மற்றும் புவனேசுவரம் ராஜ்தானி விரைவு ரயில்கள் தாமதமானதால் அதில் செல்வதற்காக காத்திருந்த பயணிகளும் நடைமேடை 12, 13, 14-ல் திரண்டனர்.

இதனால் நடைமேடை 14 மற்றும் நடைமேடை 16-க்கு அருகில் உள்ள நகரும் படிக்கட்டுகளுக்கு அருகில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இரவு 9.55 மணியளவில் அவசரகால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, புது தில்லி ரயில் நிலையத்துக்கு உடனடியாக 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டன.

ரயில் நிலையத்துக்கு தில்லி காவல் துறை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை அனுப்பப்பட்டு, கூடுதலாக 4 சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டதையடுத்து ரயில் நிலையத்தில் நெரிசல் சுட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் 15ஆக இருந்த நிலையில், படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளது.

சுரங்க விபத்து: ரேவந்த் ரெட்டியுடன் பிரதமர் மோடி ஆலோசனை

தெலங்கானா சுரங்க விபத்தில் மீட்புப் பணிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அருகில் கட... மேலும் பார்க்க

திரிவேணி சங்கமத்தில் குடும்பத்துடன் புனித நீராடிய ஜெபி. நட்டா

பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, தனது குடும்பத்துடன் சனிக்கிழமை புனித நீராடினார்.நட்டாவுடன் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ... மேலும் பார்க்க

தேர்வெழுதவிருந்த மாணவர்கள் லாரி மோதி பலி

உத்தரப் பிரதேசத்தில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் பலியாகினர்.உத்தரப் பிரதேசத்தில் பல்ராம்பூரில் திங்கள்கிழமை (பிப். 24) அரசுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், தேர்வு மையத்தின் இடத்தைச்... மேலும் பார்க்க

மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகானுக்கு விமானத்தில் உடைந்த இருக்கை

ஏர் இந்தியா விமானத்தில் தனக்கு உடைந்த இருக்கை ஒதுக்கப்பட்டிருந்ததாக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் குற்றஞ்சாட்டியுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌ... மேலும் பார்க்க

இந்தியாவுக்குள் நுழையும் டெஸ்லா! மற்ற கார்களின் விற்பனை பாதிக்குமா?

எலான் மஸ்க்கின் மின்சார கார் உற்பத்தி நிறுவனத்தின் டெஸ்லா கார்கள் இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் இறக்குமதி வரி அதிகளவில் இருந்ததால், டெஸ... மேலும் பார்க்க

தெலங்கானாவில் மதுபானக் கடைகள் 3 நாள்கள் மூடப்படும்!

ஹைதராபாத்: தேர்தலை முன்னிட்டு மதுபானக் கடைகள் 3 நாட்கள் மூடப்படும் என்று சைபராபாத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பிப்ரவரி 25 ஆம் தேதி மாலை 4 மணி முதல் பிப்ரவரி 27 மாலை 4 மணி வரை தெலங்கானா மாநில சட்... மேலும் பார்க்க