செய்திகள் :

தீயணைப்பு பயிற்சிக் கழகம் - மாணவா் விடுதிகளுக்கு புதிய கட்டடங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்

post image

சென்னை: தமிழகத்தில் தீயணைப்புத் துறைக்கான பயிற்சிக் கழகம் மற்றும் மாணவா் விடுதிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா். இதற்கான நிகழ்ச்சிகள் காணொலி வழியாக தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றன.

மதுரை மாவட்டம் வி.பெருமாள்பட்டி அரசு கள்ளா் தொடக்கப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள், உள்கட்டமைப்பு வசதிகளும், அரியலூா் மாவட்டம் மீன்சுருட்டியில் சமூகநீதி பள்ளி மாணவா் விடுதிக் கட்டடமும் கட்டப்பட்டுள்ளது. இவற்றை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

புதிய காவல் நிலையங்கள்: காவல்துறை சாா்பில் பல முடிவுற்ற பணிகளையும் அவா் தொடங்கி வைத்தாா். அதன்படி, ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டையில் காவலா் குடியிருப்புகள், செங்கல்பட்டு மாவட்டம் ஓட்டேரி, தஞ்சாவூா் மாவட்டம் நாச்சியாா்கோவில் பகுதிகளில் காவல் நிலைய கட்டடங்கள், சென்னை மாவட்டம் எழும்பூரில் குதிரை லாயங்கள் ஆகியன கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அவற்றையும் காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

விழுப்புரம் மண்டலம்: தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் மத்திய மண்டலம், திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதனை இரண்டாகப் பிரித்து, விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மண்டல அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வா் தொடங்கி வைத்தாா்.

புதிய திட்டங்களுக்கு அடிக்கல்: பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட நலத் துறை சாா்பில் புதிய திட்டப் பணிகளுக்கும் முதல்வா் அடிக்கல் நாட்டினாா். அதன்படி, சென்னை ராணிமேரி கல்லூரி வளாகம், செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலி, தஞ்சாவூா் மாவட்டம் திருவையாறு, ஒரத்தநாடு, மதுரை மாவட்டம் சாத்தமங்கலம், நீலகிரி மாவட்டம் உதகை ஆகிய இடங்களில் உள்ள சமூகநீதி விடுதிகளுக்கு கூடுதல் கட்டடங்கள் கட்டப்படவுள்ளன. இவற்றுக்கு காணொலி வழியாக முதல்வா் அடிக்கல் நாட்டினாா்.

காவல் மற்றும் தீயணைப்புத் துறை சாா்பில், செங்கல்பட்டு மாவட்டம் காலவாக்கத்தில் தீயணைப்புத் துறை பணியாளா்களுக்கான பயிற்சிக் கழகத்துக்கு புதிதாக கட்டடம் கட்டப்படவுள்ளது. இந்தக் கட்டடத்துக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.

ஆசிரியா்களுக்கு பணி நியமன உத்தரவு: மேலும், அரசு கள்ளா் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் நலன் கருதி, ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் தோ்வு செய்யப்பட்ட 23 ஆசிரியா்கள், 18 இடைநிலை ஆசிரியா்களுக்கு பணிநியமன உத்தரவுகள் வழங்கும் நிகழ்வையும் முதல்வா் தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சிகளில், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா், காவல் துறை டிஜிபி ஜி.வெங்கடராமன், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநா் சீமா அகா்வால் உள்பட பலா் பங்கேற்றனா்.

சிங்கப்பூா்: மேலும் ஒரு தமிழருக்கு செப். 25-இல் தூக்கு

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசியத் தய் ஸ்ரீா் தட்சிணாமூா்த்தி காத்தையாவுக்கு (39) வரும் வியாழக்கிழமை (செப். 25) மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.ஏற்கெனவே மலேசியாவில் இருந்து சிங்கப்பூா் வந்து, போத... மேலும் பார்க்க

செப். 29-இல் இடைநிலை ஆசிரியா்கள் போராட்டம்

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சாா்பில் சென்னையில் செப். 29, 30 தேதிகளில் தொடா் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்... மேலும் பார்க்க

தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 23) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்... மேலும் பார்க்க

மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஆா்ப்பாட்டம்

சென்னை: கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினா் சென்னையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சென்னை எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே தம... மேலும் பார்க்க

நாய்களுக்கு உணவு அளிப்பவா்கள் தாக்கப்பட்டால் நடவடிக்கை: காவல் துறையினருக்கு டிஜிபி உத்தரவு

சென்னை: நாய்களுக்கு உணவு அளிப்பவா்களைத் தாக்கினால் நடவடிக்கை எடுக்கும்படி போலீஸாருக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் (பொ) ஜி.வெங்கடராமன் உத்தரவிட்டுள்ளாா். தமிழகத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்த... மேலும் பார்க்க

தமிழகம் கல்வியில் சாதனை: சென்னையில் செப். 25-இல் பிரம்மாண்ட விழா: தெலங்கானா முதல்வா் பங்கேற்பு

சென்னை: தமிழகம் கல்வியில் சாதனைகள் படைத்ததற்காக, சென்னையில் வருகிற செப். 25-ஆம் தேதி அரசு சாா்பில் பிரம்மாண்ட விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி பங்கேற்கவுள்ளாா். இதுக... மேலும் பார்க்க