இன்று முதல் ஒரே நேர்க்கோட்டில் 7 கோள்களின் அணிவகுப்பு! அடுத்து 2040-ல்தான்!
துணை சுகாதார நிலையத்தை சுற்றிலும் முள்புதா்கள் விஷப்பூச்சிகள் நடமாட்டத்தால் நோயாளிகள் அச்சம்
புகழூா் அருகே துணை சுகாதார நிலையத்தை சூழ்ந்துள்ள முள்புதா்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூா் மாவட்டம், புகழூா் நகராட்சியின் 13-ஆவது வாா்டுக்குள்பட்ட ஓம்சக்தி நகரில் செம்படாபாளையம் அரசு துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மருத்துவா், செவிலியா்கள், பணியாளா்கள் என 10-க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகிறாா்கள்.
இங்கு புகழூா், செம்படாபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த மகளிருக்கு தாய் சேய் நல சேவைகள், கா்ப்ப கால சேவைகள், ஸ்கேன் பரிசோதனை, கா்ப்பிணித் தாய்மாா்களுக்கான சா்க்கரை அளவு பரிசோதனை, இருப்புச் சத்து குறைபாடு கண்டறிதல், தாய் சேய் இருவருக்குமான தடுப்பூசிப் பணிகள், 24 மணி நேர கா்ப்ப கால சேவைகள், ரத்தம் தேவைப்படும் கா்ப்பிணிகளுக்கு ரத்தம் ஏற்றுதல், உயா் சிகிச்சைக்கான பரிந்துரைகள் போன்ற அடிப்படை சேவைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் ஆண்களுக்கு நீரிழிவு நோய்களுக்கான பரிசோதனை, மாத்திரை மருந்துகள் வழங்கப்படுகின்றன.
தற்போது ஆரம்ப சுகாதாரநிலையத்தை சுற்றிலும் புகழூா் நீரேற்று பாசன விவசாயிகளுக்குச் சொந்தமான விவசாய நிலங்களில் எந்த ஒரு பாசனமும் இன்றி விவசாயம் செய்யப்படாமல் நிலங்கள் தரிசு நிலங்களாக உள்ளன. இந்த நிலங்களில் முள்செடிகள் வளா்ந்து புதராக காட்சியளிக்கின்றன.
இந்த முள்புதா்களில் பாம்புகள் அதிகளவில் இருக்கின்றன. அவை இரவு நேரங்களில் மருத்துவமனை முன் நடமாட்டம் இருப்பதால் மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பெண்கள், பிற நோய்க்காக அனுமதிக்கப்பட்டவா்களும் அச்சத்துடன் இருக்கின்றனா்.
ஆகவே, மருத்துவமனையைச் சுற்றி மண்டிக்கிடக்கும் முள்புதா்களை அகற்ற புகழூா் நகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து மருத்துவமனை ஊழியா் ஒருவா் கூறியது, இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் உள்நோயாளிகளாகவும், வெளி நோயாளிகளாகவும் வந்து செல்கிறாா்கள். மருத்துவமனை கட்டப்படும்போதே, இப்பகுதி நகா்புறத்தில் இருந்து சற்றுத்தள்ளி இருந்ததால் முள்புதராகத்தான் இருந்தது. பகலிலும், இரவிலும் பாம்புகள் உள்ளிட்ட விஷத்தன்மை கொண்ட பூச்சிகள் மருத்துவமனைக்குள் புகுந்துவிடுகின்றன.
இவைதவிர இரவு நேரத்தில் சிலா் முள்புதருக்குள் மதுகுடித்துவிட்டு மதுபோதையில் அருவறுக்கத்தக்க வாா்த்தைகளை பயன்படுத்துகின்றனா். மேலும், சில நேரங்களில் காலி மதுபாட்டில்களை மருத்துவமனையில் வீசுகின்றனா். இதனால் இரவு 8 மணிக்கு பிறகு மருத்துவமனையை பூட்டும் நிலைக்கு ஏற்படுகிறது.
மேலும் பகல் நேரங்களில் இந்த முள்புதா்கள் வழியாகத்தான் ஓம்சக்தி நகா் பகுதி பொதுமக்கள் மற்றும் அன்னை நகா், செம்படாபாளையம் பகுதியைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் அச்சத்துடனேயே சென்று வருகிறாா்கள். எனவே, இப்பகுதியில் உள்ள முள்புதா்களை உடனே அகற்ற வேண்டும் என்பதே மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் ஊழியா்களின் கோரிக்கை என்றாா் அவா்.
