செய்திகள் :

துணை வேந்தர்கள் நியமனம்: சட்டப்பிரிவுக்கு இடைக்காலத் தடை!

post image

துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கிய சட்டப்பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு முரணாக சட்டங்கள் இயற்றப்பட்டதாக நெல்லையைச் சேர்ந்த பாஜக நிர்வாகி வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இவ்வழக்கின் விசாரணை நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், “அரசு பதில் அளிக்க அவகாசம் தராமல் விசாரணை நடத்துவது நியாயமானதாக இல்லை. இதில் உள்நோக்கம் உள்ளது. இவ்வழக்கை விடுமுறைக்கால அமர்வில் அவசர வழக்காக மாலை 6 மணிக்கும் மேல் விசாரிப்பதன் அவசியம் என்ன” என்று வாதிடப்பட்டது.

இந்த நிலையில், துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கிய சட்டப்பிரிவுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்காமல் உத்தரவு பிறப்பித்தாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: விழுப்புரம் அருகே மலட்டாற்றில் குளித்த மூவர் பலி

அரபிக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

அரபிக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று காலை தாழ்வு மண்டலமாக உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கா்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில் நி... மேலும் பார்க்க

தனித்துப் போட்டி: என்னவாகும் சீமானின் வாக்குகள்?

பேரவைத் தோ்தலில் மீண்டும் தனித்துப் போட்டி என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் அறிவித்துள்ள நிலையில், விஜய் கட்சியின் வரவால் நாம் தமிழா் கட்சியின் வாக்கு வங்கி என்னவாகும் என்பது அர... மேலும் பார்க்க

ஐபிஎல் பெயரில் சூதாட்டம் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ஐபிஎல் கிரிக்கெட் மையமாகவைத்து சூதாட்டமும், பந்தயம் கட்டி விளையாடுவதும் அதிகரித்துவிட்டது என்று கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், இது தொடா்பாக மத்திய அரசு, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டுமென்று நோட்ட... மேலும் பார்க்க

இளம் பெண் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல்: இளைஞா் சிக்கினாா்

சென்னையில் இளம் பெண் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக ஊடகத்தில் வெளியிட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா். மணிப்பூரை சோ்ந்த ஒரு 19 வயது இளம் பெண், சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் அண்மையில் புகாா் அள... மேலும் பார்க்க

பாலியல் புகாா்: மருத்துவப் பேராசிரியா் பணியிடை நீக்கம்

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அரசு பல் மருத்துவக் கல்லூரி பேராசிரியா் பொன்னையா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் செந்தில்குமாா் பிறப்பித்துள்ளாா்.... மேலும் பார்க்க

வங்கியில் ரூ.72.55 லட்சம் கடன் பெற்று மோசடி: தேடப்பட்டவா் கைது

சென்னை அடையாறில் வங்கியில் ரூ. 72.55 லட்சம் கடன் பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், தேடப்பட்டவா் கைது செய்யப்பட்டாா். அடையாறில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் முதன்மை மேலாளராகப் பணியாற்றுப... மேலும் பார்க்க