செய்திகள் :

துப்பாக்கியால் சுட்ட வளர்ப்பு நாய்! உரிமையாளர் படுகாயம்!

post image

அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் வளர்ப்பு நாயால் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் உரிமையாளர் படுகாயமடைந்துள்ளார்.

டென்னிசி மாகணத்தைச் சேர்ந்தவர் ஜெரால்டு கிர்க்வுட், இவர் தனது வீட்டில் ஓரியோ எனப் பெயரிட்டு பிட் புல் ரக நாய் ஒன்றை வளர்த்து வந்தார். இந்நிலையில், நேற்று (மார்ச் 10) அதிகாலை 4 மணியளவில் ஜெரால்டு அவரது காதலியுடன் உறங்கி கொண்டிருந்தார்.

அப்போது, அவர்களது படுக்கையின் மீது அவரது வளர்ப்பு நாய் தாவி குதித்து விளையாடியதில் ஜெரால்டுக்கு சொந்தமான துப்பாக்கியினுள் அந்த நாயின் கால் சிக்கி அதனை வெடிக்க செய்ததாகக் கூறப்படுகிறது. இதில், அவரது வலது துடையினுள் குண்டு பாய்ந்து அவர் படுகாயமடைந்துள்ளார்.

இதையும் படிக்க:ரயில் சிறைப்பிடிப்பு: 20 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை! 400 பயணிகளின் கதி என்ன?

இதனைத் தொடர்ந்து, அந்நாட்டு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் ஜெரால்டை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பின்னர் அவர் தற்போது நலமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜெரால்டின் காதலி கூறுகையில், ஓரியோ விளையாட்டுத் தனமான நாய் என்றும் அந்த இதுபோல் அடிக்கடி குதித்து விளையாடும் என்றும் அவ்வாறு விளையாடுகையில் தற்போது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கை விபத்தாக பதிவு செய்துள்ள அந்நாட்டு காவல் துறையினர் துப்பாக்கி போன்ற ஆயுதங்களின் உரிமையாளர்கள் அதற்கேற்ற முறையான பராமரிப்பு மற்றும் பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

உலகளவில் 56 மனித சிறுநீரகங்களை விற்ற உக்ரேனிய பெண் போலந்தில் கைது!

சட்டவிரோதமாக 56 மனித சிறுநீரகங்களைப் பெற்று அதனை விற்பனை செய்து கசகஸ்தானில் சிறைத் தண்டனை பெற்ற உக்ரேனிய பெண் போலந்து நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சர்வதேச அளவில் மனித உறுப்புகளைக் கடத்தும் கும்பல... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கையில் திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது! - அன்புமணி ராமதாஸ்

மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: மும்மொழிக் கொள்கையை... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட 23 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுத... மேலும் பார்க்க

அதீத உணவு சாப்பிடும் விடியோக்கள் மூலம் பிரபலமானவர் உடல் பருமனால் மரணம்!

அதீத உணவுகளை சாப்பிட்டு அதனை டிக்டாக் விடியோவாக வெளியிட்டு பிரபலமடைந்த துருக்கி நாட்டைச் சேர்ந்த 24 வயது இளைஞர் உடல் பருமனால் மரணமடைந்துள்ளார். துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் எஃபெகான் குல்தூர் (வயது 24)... மேலும் பார்க்க

ஆற்றின் முகத்துவாரம் தோண்டுவதில் மோதல்! 40 கிராமவாசிகள் கைது!

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் ஆற்றின் முகத்துவாரம் தோண்டப்பட்ட விவகாரத்தில் இரண்டு கிராமங்களுக்கிடையே வெடித்த மோதலினால் 40 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சம் மாவட்டத்தில் ராமாய... மேலும் பார்க்க

நாடு கடத்தப்பட்டு மீண்டும் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 3 பேர் கைது!

இந்தியாவிலிருந்து அவர்களது தாயகத்திற்கு நாடு கடத்தப்பட்டு மீண்டும் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 3 பேர் புது தில்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் 10 அன்று காவல் துறையினருக்கு கிடைத... மேலும் பார்க்க