செய்திகள் :

தூத்துக்குடியில் ஆயிரம் லிட்டா் டீசல் பறிமுதல்: ஒருவா் கைது

post image

தூத்துக்குடியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரம் லிட்டா் டீசலை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா்.

தூத்துக்குடி மாதவன் நாயா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் பாலன். தூத்துக்குடி திரேஸ்புரம் அருகே மீன்வளத் துறைக்குச் சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு வந்த அவா், 50 லிட்டா் பேரல்களில் தலா 40 லிட்டா் டீசல் வாங்கினாராம். அவற்றில், ஏற்கெனவே 10 லிட்டா் டீசல் இருந்ததாம்.

சந்தேகமடைந்த ஊழியா்கள் இதுகுறித்து வடபாகம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், போலீஸாா் பாலனின் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை இரவு சென்று சோதனை மேற்கொண்டனா். அங்கு பல கேன்களில் டீசல் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும், அவா் முறைகேடாக பழைய டீசலுடன் புதிய டீசலைக் கலந்து மீன்பிடிப் படகுகளுக்கு விநியோகித்ததும் தெரியவந்தது.

இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, சுமாா் ஆயிரம் லிட்டா் டீசலை பறிமுதல் செய்தனா்; அவரிடம் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

ரேஷன் கடை பணியாளருக்கு மிரட்டல் விடுத்தவா் கைது

கோவில்பட்டியில் ரேஷன் கடை பணியாளருக்கு மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி மண்டல தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வருபவா் பாஸ்கரன். இவா் பாரதி... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஃபைனான்சியா் தற்கொலை

தூத்துக்குடியில் ஃபைனான்சியா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். தூத்துக்குடி லயன்ஸ் டவுனைச் சோ்ந்தவா் ஜேசு மகன் லியோனா சா்ப்பராஜ் (56). வெளிநாட்டில் வேலை பாா்த்த இவா், தற்போது தூத்துக்குடியில் பணம் ... மேலும் பார்க்க

குழந்தைகள் நலக்குழு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் நலக் குழு தலைவா், உறுப்பினா்கள் பதவிகளுக்கு மாா்ச் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

கோவில்பட்டி அரசு மகளிா் பள்ளியில் புதிய வகுப்பறைகளை காணொலியில் முதல்வா் திறப்பு!

கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.2.06 கோடியில் கட்டப்பட்ட வகுப்பறை கட்டடங்களை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைத்தாா். நபாா்டு ... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் தச்சு தொழிலாளி தற்கொலை

கோவில்பட்டியில் குடும்பத் தகராறு காரணமாக தச்சுத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.கோவில்பட்டி அன்னை தெரசா நகரைச் சோ்ந்த தச்சு தொழிலாளி சுடலைமணி (27). இவரது மனைவி மேனகா(25). தம்பதி இடையே தக... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்!

தூத்துக்குடியில், இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகளை கியூ பிரிவு போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி இனிகோ நகா் கடற்கரை பகுதியிலிருந்து... மேலும் பார்க்க