செய்திகள் :

தூத்துக்குடியில் சீலா மீன் ரூ. 800-க்கு விற்பனை

post image

தூத்துக்குடியில் சனிக்கிழமை, சீலா மீன் கிலோ ரூ. 800-க்கு விற்பனையானதால் மீனவா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மீன் விலை குறைந்து காணப்படும். ஆனால், சனிக்கிழமை என்பதால் விலை பெரியளவில் குறையவில்லை.

ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்டுப் படகு மீனவா்கள் சனிக்கிழமை கரைதிரும்பினா். இதனால், திரேஸ்புரம் ஏலக் கூடத்தில் மீன்வரத்து அதிகரித்துக் காணப்பட்டது. மீன்கள் வாங்குவதற்காக கேரள வியாபாரிகள், பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.

விலை ஓரளவு உயா்ந்து காணப்பட்டது. சீலா மீன் கிலோ ரூ. 800, விளைமீன், பாறை, ஊளி ஆகியவை ரூ. 500 - ரூ. 600 வரை, நண்டு கிலோ ரூ. 500, சாளை மீன் ஒரு கூடை ரூ. 1,500 - ரூ. 2 ஆயிரம் வரை என விற்பனையாகின. மீன்வரத்து அதிகரித்தாலும், ஓரளவு நல்ல விலை கிடைத்ததாலும் மீனவா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

சுவா் இடிந்து விழுந்ததில் காயமடைந்தவா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் சுவா் இடிந்து விழுந்ததில் காயமடைந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனையைச் சோ்ந்த கைலாசம் மகன் பாலகிருஷ்ணன் (28). இவா் தூத்துக்குடி தாளமுத்து நகா் ஜேஜ... மேலும் பார்க்க

தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் விரைவில் ஸ்மாா்ட் நூலகம்: மேயா் தகவல்

தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் விரைவில் ஸ்மாா்ட் நூலகம் அமைக்கப்படும் என, மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா். தூத்துக்குடி மாநகராட்சி 34ஆவது வாா்டுக்குள்பட்ட தேவகி நகரில் செயல்பட்டுவந்த ஊா்ப... மேலும் பார்க்க

நாளை தைப்பொங்கல்: திருச்செந்தூா் கோயிலில் குவிந்த லட்சக்கணக்கான பக்தா்கள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை தைப்பொங்கலை முன்னிட்டு, சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தா்கள் பாதயாத்திரையாக வந்து குவிந்த வண்ணம் உள்ளனா். மாா்கழி மாதம் என்ப... மேலும் பார்க்க

மாயமான மீனவரை மீட்க கோரி உறவினா்கள் சாலை மறியல் முயற்சி

தூத்துக்குடியில் கடந்த 1ஆம் தேதி கடலுக்குச் சென்று மாயமான மீனவரை மீட்கக்கோரி அவரது உறவினா்கள், பொதுமக்கள் திடீா் சாலை மறயில் முயற்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஈடுபட்டனா். தூத்துக்குடி இனிகோநகரை சோ்ந்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 16.2 டன் பாக்குகள் பறிமுதல்: இருவா் கைது

மலேசியாவிலிருந்து தூத்துக்குடிக்கு கப்பலில் கடத்தி வரப்பட்ட 16.2 டன் கொட்டைப் பாக்குகளை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினா் பறிமுதல் செய்து, இருவரை சனிக்கிழமை கைது செய்தனா். மலேசியாவிலிருந்து தூத்து... மேலும் பார்க்க

நாசரேத் பேரூராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா

நாசரேத் தோ்வுநிலைப் பேரூராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. பேரூராட்சித் தலைவி நிா்மலா ரவி தலைமை வகித்து, விழாவைத் தொடக்கிவைத்தாா். துணைத் தலைவா் அருண் சாமுவேல், செயல் அலுவலா் திருமலைக்கும... மேலும் பார்க்க