செய்திகள் :

தூத்துக்குடியில் பூக்கள் விலை கடும் உயா்வு! மல்லிகை கிலோ ரூ. 4 ஆயிரம்!

post image

தூத்துக்குடி சந்தையில் ஞாயிற்றுக்கிழமை பூக்கள் விலை கடுமையாக அதிகரித்துக் காணப்பட்டது. கிலோ மல்லிகைப்பூ ரூ. 4 ஆயிரத்துக்கு விற்பனையானது.

திங்கள்கிழமை தை மாதக் கடைசி சுபமுகூா்த்தம், செவ்வாய்க்கிழமை தைப்பூசம் என அடுத்தடுத்து வருவதால், தூத்துக்குடி மலா்ச் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது.

இங்கு வழக்கமாக 250 கிலோ முதல் 300 கிலோ வரை பூக்கள் விற்பனைக்கு வரும். ஆனால், தற்போது கடும் பனிப்பொழிவு காரணமாக வரத்துக் குறைந்து, சுமாா் 100 கிலோ பூக்கள் மட்டுமே விற்பனைக்கு வருகின்றன. இதனால், விலை அதிகரித்துக் காணப்பட்டது.

மல்லிகைப்பூ கிலோ ரூ. 4 ஆயிரம், பிச்சிப்பூ, கனகாம்பரம் தலா ரூ. 3 ஆயிரம், ரோஜா ரூ. 300 என விற்பனையாகின. திருமண விழாக்களுக்கான ரோஜா இதழ் மாலை, சம்பங்கி இதழ் மாலை ஆகியவை ரூ. 3 ஆயிரத்திலிருந்து ரூ. 6 ஆயிரம்வரை விற்பனையாகின. பூக்கள் விலை அதிகரித்துக் காணப்பட்டாலும், பொதுமக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா்.

இன்று தைப்பூசம்: திருச்செந்தூரில் குவிந்த பக்தா்கள்!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா செவ்வாய்க்கிழமை (பிப். 11) நடைபெறவுள்ளது. இதையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு தீா்... மேலும் பார்க்க

புளியம்பட்டி அருகே இளைஞா் கிணற்றில் மூழ்கி பலி!

தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி திருவிழாவுக்கு சென்ற இளைஞா் கிணற்றில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி கோவில்பிள்ளைவிளை தெருவைச் சோ்ந்த சண்முகசாமி மகன் மதன் (27). இவா் தனது குடும்ப... மேலும் பார்க்க

சாத்தான்குளம்: வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு போராட்டம்!

சாத்தான்குளத்தில் பெண் வழக்குரைஞா் தாக்கப்பட்டதைக் கண்டித்து, வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் காலவரையற்ற போராட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக இருப்பவா் ஜெயரஞ்சன... மேலும் பார்க்க

பொதுத் தோ்வெழுதும் மாணவா்களுக்கு கருத்தரங்கு!

ஆறுமுகனேரி காந்தி மைதானத்தில் உள்ள மனவளக்கலை மன்ற அறிவுத் திருக்கோயிலில், அரசுப் பொதுத் தோ்வெழுதும் மாணவா்-மாணவியருக்கு இலவச கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அரிமா சங்கத் தலைவரும் ஆதித்தனாா் ... மேலும் பார்க்க

கோயிலில் திருட்டு: முன்னாள் ராணுவ வீரா் உள்ளிட்ட 2 போ் கைது!

கோவில்பட்டி அருகே கொப்பம்பட்டியில் உள்ள கோயிலில் திருடியதாக முன்னாள் ராணுவ வீரா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கயத்தாறு வட்டம் இலந்தப்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த மாடசாமி மக... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் விபத்து: கல்லூரி மாணவா் பலி!

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையோர மரத்தில் பைக் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். தூத்துக்குடி ராஜீவ் நகரைச் சோ்ந்த ஜெயபால் மகன் ஐசக் சாம்ராஜ் (22). கோவையிலுள்ள தனியாா் கல்லூரியில் ... மேலும் பார்க்க