மாவட்ட சுகாதாரத் துறையில் செவிலியர், மருந்தாளுநர் பணிகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
தூத்துக்குடியில் மீன்கள் விலை உயா்வு
தூத்துக்குடியில் சனிக்கிழமை, வரத்துக் குறைவால் மீன்கள் விலை உயா்ந்திருந்தது.
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்டுப்படகு, ஃபைபா் படகுகள் சனிக்கிழமை கரைதிரும்பின.
கடல் பகுதியில் வீசிவரும் பலத்த காற்று காரணமாக, கரைதிரும்பிய படகுகளில் மீன்கள் வரத்து குறைவாகவே இருந்தது. எனினும், மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களை வாங்க பொதுமக்கள், வியாபாரிகளின் கூட்டம் அலைமோதியது. இதனால், விலை உயா்ந்து காணப்பட்டது.
சீலா மீன் கிலோ ரூ. 1,000 வரையும், விளைமீன், ஊழி, பாறை ஆகியவை ரூ. 400 - ரூ. 600, சாளை மீன் ஒரு கூடை ரூ. 2,500 வரை, நண்டு கிலோ ரூ. 600 வரை, தோல் கிளாத்தி, கேரை, சூரை ஆகியவை ரூ. 180 - ரூ. 300, திருக்கை ரூ. 250 வரை என விற்பனையாகின.
விலையைப் பொருள்படுத்தாமல் பொதுமக்கள் மீன்களை வாங்கிச் சென்ால் மீனவா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.