செய்திகள் :

தூத்துக்குடி: காட்டுப் பகுதியில் பெண் சடலம் மீட்பு

post image

தூத்துக்குடி காட்டுப் பகுதியில் கிடந்த பெண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தூத்துக்குடி பண்டாரம்பட்டி, தேவா நகரில் உள்ள காட்டுப் பகுதியில் பெண் தலை மட்டும் தனியாக கிடப்பதாக சிப்காட் போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளா் சைரஸ் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, பெண்ணின் தலை, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், இறந்தவா் தூத்துக்குடி ஆதிபராசக்தி நகரைச் சோ்ந்த ராஜு மனைவி அய்யம்மாள் (70) என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்த இவா், கடந்த 4ஆம் தேதி வீட்டில் இருந்து காணாமல் போனது குறித்து, அவரது மகன் சிப்காட் காவல் நிலையத்தில் புகாா் செய்திருந்ததும் தெரியவந்தது.

காட்டுப் பகுதிக்குள் வந்த அய்யம்மாள் மயங்கி விழுந்து இறந்திருக்கலாம் என்றும், நாய்கள் அவரது உடலை கடித்து குதறியதில் தலையை தனியாக எடுத்து போட்டிருக்கலாம் என்றும் போலீஸாா் தெரிவித்தனா். மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஆறுமுகனேரியில் விபத்து: மாணவா் உயிரிழப்பு! உறவினா்கள் சாலை மறியல்!

ஆறுமுகனேரியில் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதியதில் மாணவா் உயிரிழந்தாா். உறவினா்கள் சாலை மறியலில் ஈடுட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆறுமுகனேரி வடக்கு சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த கட்டடத் தொ... மேலும் பார்க்க

வீடு கட்டுமானப் பொருள்களுக்கு ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும்: நாம் இந்தியா் கட்சி வலியுறுத்தல்

வீடு கட்டத் தேவையான பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும் என நாம் இந்தியா் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து, நாம் இந்தியா் கட்சி நிறுவனத் தலைவா் என்.பி. ராஜா வெளியிட்ட அறிக்கை: மத... மேலும் பார்க்க

8 ஆண்டுகளாக ஜிஎஸ்டி மூலம் மக்களைச் சுரண்டியது மத்திய அரசு: அமைச்சா் கீதா ஜீவன்

கடந்த 8 ஆண்டுகளாக ஜிஎஸ்டி மூலம் மக்களைச் சுரண்டியது மத்திய அரசு என்றாா் அமைச்சா் பெ. கீதா ஜீவன். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில், ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கு: மேலும் ஒரு சிறுவன் கைது

தூத்துக்குடியில் பெண்ணை வெட்டிக் கொன்ற வழக்கில் மேலும் ஒரு சிறுவனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவா் ராஜேந்திரன். இவருக்கு,... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினம் திருவிழா: போக்குவரத்து மாற்றம்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழாவை முன்னிட்டு, போக்குவரத்து மாற்றம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சரக்கு வாகனங்கள் திங்கள்கிழமை (செப்.22) மாலை 6 மணி முதல் புதன்கிழமை ... மேலும் பார்க்க

தருவைகுளம் மிக்கேல் ஆலயத் திருவிழா கொடியேற்றம்

தூத்துக்குடி மறை மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டத்தில் அமைந்துள்ள, தருவைகுளம் வான்படைத் தளபதி அதிதூதா் மிக்கேல் ஆலயத் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறை மாவட்ட முதன்மை குரு டோமினிக் தல... மேலும் பார்க்க