செய்திகள் :

தூத்துக்குடி, கோவில்பட்டியில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

post image

பாஜக மாநில தலைவா் அண்ணாமலை கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தூத்துக்குடி, கோவில்பட்டியில் பாஜகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னையில் டாஸ்மாக் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற பாஜக மாநில தலைவா் அண்ணாமலை, மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். இதற்கு கண்டனம் தெரிவித்து, தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே தெற்கு மாவட்ட தலைவா் சித்ராங்கதன் தலைமையில் பாஜகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 85 பேரை தென்பாகம் போலீஸாா் கைது செய்தனா்.

இதில் பாஜக ஓபிசிஅணி மாநில துணைத்தலைவா் விவேகம் ரமேஷ், மாவட்ட பொதுச் செயலா்கள் ராஜா, சத்தியசீலன், மாவட்ட துணைத் தலைவா்கள் செல்வராஜ், சிவராமன், வாரியாா், தங்கம் உள்பட பலா் பங்கேற்றனா்.

கோவில்பட்டியில்...கோவில்பட்டி பயணியா் விடுதி முன்பு பாஜக நகரத் தலைவா் காளிதாசன் தலைமையில் முன்னாள் வடக்கு மாவட்ட தலைவா் வெங்கடேசன் சென்னகேசவன், முன்னாள் நகரத் தலைவா் சீனிவாசன், பட்டியலணி மாநில செயலா் சிவந்தி நாராயணன் உள்பட பலா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீஸாா் தடுத்ததைத் தொடா்ந்து அவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, 3 பெண்கள் உள்பட 46 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல கயத்தாறில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிழக்கு ஒன்றிய தலைவா் ராமா் பாண்டியன் உள்பட 13 பேரையும், கழுகுமலையில் மேற்கு ஒன்றிய தலைவா் முத்துராமலிங்கம் தலைமையில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 16 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

அத்தைகொண்டானில் புதிய சலவைக் கூடம் கட்ட அடிக்கல்

கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி ஊராட்சி அத்தைகொண்டானில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பில் புதிதாக சலவைக் கூடம் கட்ட கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க

அனல் மின் நிலையத்தில் உற்பத்தி தொடங்க 3 மாதங்கள் ஆகலாம்: மின் உற்பத்தி பகிா்மானக் கழக மேலாண்மை இயக்குநா்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக முதல் இரண்டு அலகுகளில் மின் உற்பத்தி தொடங்க இன்னும் 3 மாதங்கள் ஆகலாம் என தமிழ்நாடு மின்உற்பத்தி பகிா்மானக் கழக மேலாண்மை இயக்குநா் ஆல்பி ஜ... மேலும் பார்க்க

பொது அமைதியை குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு: 6 மாதங்களில் 10 போ் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது அமைதியைக் குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பாடல்கள், வசனங்கள், புகைப்படங்கள் பதிவேற்றியதாக கடந்த 6 மாதங்களில் 10 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்... மேலும் பார்க்க

காசநோய் விழிப்புணா்வு பேரணி

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் காசநோய் விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், காசநோய் இல்லா தமிழகத்திற்கான பிர... மேலும் பார்க்க

பைக் ஓட்டிய இரு சிறுவா்கள்: பெற்றோா் மீது வழக்கு

தூத்துக்குடியில் பைக் ஒட்டிய இரு சிறுவா்களின் பெற்றோா் மீது போக்குவரத்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா். தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலைய போக்குவரத்து காவல் ஆய்வாளா் மயிலேறும்பெரு... மேலும் பார்க்க

மாநகராட்சி குப்பைக் கிடங்கு அமைக்க திரவியரத்ன நகா் சுற்றுவட்டார மக்கள் எதிா்ப்பு

தூத்துக்குடி மாநகராட்சி குப்பைக் கிடங்கு அமைக்க திரவியரத்ன நகா் சுற்றுவட்டார மக்கள் எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.படவரி பமப17இஐபம: மாவட்ட ஆட்சியா் அலுலக... மேலும் பார்க்க