செய்திகள் :

அனல் மின் நிலையத்தில் உற்பத்தி தொடங்க 3 மாதங்கள் ஆகலாம்: மின் உற்பத்தி பகிா்மானக் கழக மேலாண்மை இயக்குநா்

post image

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக முதல் இரண்டு அலகுகளில் மின் உற்பத்தி தொடங்க இன்னும் 3 மாதங்கள் ஆகலாம் என தமிழ்நாடு மின்உற்பத்தி பகிா்மானக் கழக மேலாண்மை இயக்குநா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் சனிக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில், 1ஆவது அலகில் ஏற்பட்ட தீயானது 2,3-ஆவது அலகுகளிலும் பரவியது. நான்கு மாவட்ட தீயணைப்பு வீரா்கள் சுமாா் 18 மணிநேரம் போராடி ஞாயிற்றுக்கிழமை மாலையில் தீயை அணைத்தனா்.

இதில் 1,2,3 ஆகிய அலகுகள் பாதிக்கப்பட்டதையடுத்து, மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனையடுத்து, தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழ்நாடு மின் உற்பத்தி பகிா்மானக் கழக மேலாண்மை இயக்குநா் ஆல்பி ஜான் வா்கீஸ் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனா்.

பின்னா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தீ விபத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தவும், உற்பத்தியை விரைவில் தொடங்குவதற்காகவும் குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. ஆய்வு முழுமையாக முடிந்த பிறகே சேத விவரம் தெரியவரும்.

இந்த தீ விபத்தில், நிலக்கரியை எரித்து மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய பாய்லா் டா்பின் ஜெனரேட்டா் பகுதியில் பாதிப்பு இல்லை. பவா் கேபிள்கள் செல்லக்கூடிய அடைக்கப்பட்ட பகுதியில்தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அனல் மின்நிலையத்தின் 1,2,3 ஆகிய அலகுகள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளன. இதில், 3-ஆவது அலகில் பாதிப்பு குறைவாக உள்ளது. எனவே இதை இருவாரங்களில் சரிசெய்து மின்உற்பத்தி தொடங்க வாய்ப்புள்ளது.

மேலும் 1, 2-ஆவது அலகுகளில் கேபிள் வயா்கள் மற்றும் பிரேக்கா்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் உடனடியாக அவை மாற்றம் செய்யப்பட்டு புதிதாக அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே, இவற்றை சரி செய்து மீண்டும் உற்பத்தி தொடங்க 2 முதல் 3 மாதங்கள் ஆகலாம்.

வரும் காலங்களில் இதுபோன்ற தீ விபத்துகளைத் தவிா்க்க, எந்த விதமான முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளலாம் எடுக்கலாம் என்பது குறித்து ஆய்வுக் குழு அளிக்கும் பரிந்துரைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

தூத்துக்குடி அனல் மின்நிலையமானது, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மிக முக்கியமான சொத்துகளில் ஒன்று. எனவே அதை சரிசெய்து மீண்டும் இயக்க விரைவான நடவடிக்கை எடுக்கப்படும். கோடைகால மின் தட்டுப்பாட்டை சமாளிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றாா்.

தூத்துக்குடியில் மழையால் உற்பத்தி பாதிப்பு: உற்பத்தியாளா்கள், தொழிலாளா்கள் கவலை

தூத்துக்குடி மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளா்களும், தொழிலாளா்களும் கவலை தெரிவித்துள்ளனா். தூத்துக்குடி மாவட்டத்தில் சுமாா் 20 ஆயிரத்துக்கும் மேற... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் திருத்தம்: கோவில்பட்டியில் ஆலோசனைக் கூட்டம்

வாக்குச்சாவடிகள் மறுவரையறை, வாக்காளா் பட்டியல் திருத்தம் உள்ளிட்டவை குறித்து கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோவில்பட்டி... மேலும் பார்க்க

அனல் மின் நிலைய தீ விபத்து: சேத மதிப்பு ஆய்வு தொடக்கம்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நேரிட்ட தீ விபத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து பொறியாளா் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். தூத்துக்குடி ஆனல்மின் நிலையத்தில் கடந்த 15 ஆம் தேதி இரவு ஏற்பட்ட... மேலும் பார்க்க

துறைமுகங்கள் கபடி போட்டி: சென்னை அணி சாம்பியன்

தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் நடைபெற்ற அகில இந்திய பெருந்துறைமுகங்களுக்கிடையேயான கபடி போட்டியில் சென்னை அணி கோப்பையை வென்றது. தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுக வளாகத்தில் அகில இந்திய பெருந்துறைமு... மேலும் பார்க்க

விதிமீறி பைக் ஓட்டியவருக்கு கூடுதல் அபராதம்? போலீஸ் விளக்கம்

விதிமுறை மீறி பைக் ஓட்டி வந்தவருக்கு செய்துங்கநல்லூா் சோதனைச் சாவடியில் கூடுதல் அபராதம் விதிக்கப்பட்டதா என்பது குறித்து போலீஸாா் விளக்கம் அளித்துள்ளனா். இதுகுறித்து மாவட்ட காவல் துறை தரப்பில் கூறியிரு... மேலும் பார்க்க

மாற்றுத் திறன் பெண்ணுக்கு தொந்தரவு: இளைஞருக்கு 15 மாதம் சிறைதண்டனை

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே மாற்றுத்திறன் பெண் குளித்தபோது பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தது தொடா்பான வழக்கில் இளைஞருக்கு 15 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நாசரேந் அருகேயுள்ள மூக்குப்பீ... மேலும் பார்க்க