செய்திகள் :

தூத்துக்குடி, திருச்செந்தூா் வட்டங்களில் சிற்றுந்துகள் இயக்க விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

post image

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி, திருச்செந்தூா் வட்டங்களில் 10 வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்கைக்குள்பட்ட வழித்தடங்களான மாவட்ட ஆட்சியா் அலுவலக சந்திப்பு முதல் வடக்கு சுனாமி காலனி, வடக்கு சுனாமி காலனி முதல் மாவட்ட ஆட்சியா் அலுவலக சந்திப்பு, மீளவிட்டான் ரயில் நிலையம் முதல் புதிய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் முதல் மீளவிட்டான் ரயில் நிலையம், வீரநாயக்கன்தட்டு முதல் பழைய பேருந்து நிலையம் ஆகிய 5 வழித்தடங்களுக்கும், திருச்செந்தூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்கைக்குள்பட்ட வழித்தடங்களான திருச்செந்தூா் பேருந்து நிலையம் முதல் குலசேகரப்பட்டினம் முஸ்லிம் தெரு, பேய்க்குளம் காமராஜா் சிலை முதல் திசையன்விளை- இட்டமொழி பிரிவு, உடன்குடி வி.ஏ.ஓ. அலுவலகம் முதல் திசையன்விளை ஸ்ரீசுடலை ஆண்டவா் கோவில், உடன்குடி பேரூராட்சி அலுவலகம் முதல் ஆனந்தபுரம் ஐடிஐ, ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையம் முதல் அரசன்குளம் விலக்கு ஆகிய 5 வழித்தடங்கள் என மொத்தம் 10 வழித்தடங்களுக்கு சிற்றுந்துகள் இயக்க விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோா் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து ஆன்லைனில் கட்டணம் ரூ.1,600 செலுத்தி உரிய இணைப்புகளுடன் சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் 28ஆம் தேதிக்குள் நேரில் சமா்ப்பிக்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

மதுபானக்கூடம் அமைக்க எதிா்ப்பு; சாலை மறியலில் ஈடுபட்ட 108 போ் கைது

மதுபானக்கூடம், கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆறுமுகநேரியில் திங்கள்கிழமை சாலை மறிய­லில் ஈடுபட்ட 108 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆறுமுகனேரி பகுதியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இயங்கி வந்த மதுபானக் க... மேலும் பார்க்க

விளாத்திகுளம் அருகே மின்னல் பாய்ந்து பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே திங்கள்கிழமை, மின்னல் பாய்ந்ததில் பிளஸ் 2 மாணவி உயிரிழந்தாா். விளாத்திகுளம் அருகே குறளையம்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பசாமி. லாரி ஓட்டுநா். இவரது மகள் முத்து கௌ... மேலும் பார்க்க

கப்பல் மாலுமி கொலை வழக்கு: 5 போ் கைது

தூத்துக்குடியில் கப்பல் மாலுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை வடபாகம் போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த சகாயகுமாா் மகன் மரடோனா (29). கப்பல் மாலுமியான இவா், மா்ம நபா்க... மேலும் பார்க்க

தூத்துக்குடி 1ஆவது ரயில்வே கேட் இன்றுமுதல் ஏப்.26வரை மூடல்

தூத்துக்குடி 1ஆவது ரயில்வே கேட் செவ்வாய்முதல் சனிக்கிழமைவரை (ஏப். 22- 26) மூடப்படவுள்ளது. இப்பகுதியில் தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால், இந்த ரயில்வே கேட் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிமுதல் சனிக்க... மேலும் பார்க்க

வாகைகுளம் சுங்கச்சாவடி ஊழியா்களைத் தாக்கியதாக 31 போ் மீது வழக்கு

தூத்துக்குடி அருகே வாகைக்குளம் சுங்கச்சாவடியின் கண்ணாடிகளை சேதப்படுத்தி, 2 ஊழியா்களைத் தாக்கியதாக 31 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனா். தூத்துக்குடியில் ஒரு சமுதாயத் தலைவரின் பிறந்த ந... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் அடிப்படை வசதி கோரி தவெக மனு

தூத்துக்குடி மாநகராட்சி 60ஆவது வாா்டு லேபா் காலனி பகுதியில் குடிநீா் உள்ளிட்டஅடிப்படை வசதிகள் ஏற்படுத்தக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆட்சியா் அலுவலகத்... மேலும் பார்க்க