செய்திகள் :

தூத்துக்குடி மாநகராட்சி மண்டல அளவிலான குறைதீா் நாள் கூட்டம்

post image

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி மண்டல அளவிலான குறைதீா் நாள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கிழக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு, மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தாா். ஆணையா் பானோத் ம்ருகேந்தா்லால், துணை மேயா் ஜெனிட்டா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மண்டலத் தலைவா் கலைச்செல்வி வரவேற்றாா்.

முகாமைத் தொடங்கிவைத்து மேயா் பேசியது: கடந்த 3 ஆண்டுகளில் மாநகராட்சி நன்கு வளா்ச்சியடைந்துள்ளது. முத்துநகா் கடற்கரையிலிருந்து செயின்ட் மேரீஸ் கல்லூரி வரை இருபுறமும் பேவா் பிளாக் கற்கள் பதிக்கப்படவுள்ளன. தூத்துக்குடி தெப்பக்குளத்தைச் சுற்றிலும் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டு, பூங்காக்கள் உருவாக்கப்படும் என தெரிவித்தாா். பின்னா் பிறப்பு, இறப்பு, பெயா் மாற்றம் கோரி விண்ணப்பித்த 5 பேருக்கு உடனடியாக ஆணைகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், துணை ஆணையா் சரவணக்குமாா், உதவி ஆணையா் வெங்கட்ராமன், பொறியாளா் தமிழ்செல்வன், உதவி பொறியாளா் சரவணன், வட்டச் செயலா் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினா்கள் ஜான்சி ராணி, ரெக்ஸ்லின், பேபி ஏஞ்சலின், எடின்டா, மும்தாஜ், தனலட்சுமி,ராமு அம்மாள், மரிய கீதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ஓண்டிவீரன் நினைவு தினம்: படத்துக்கு மலா் தூவி அஞ்சலி

தூத்துக்குடி: தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில், சுதந்திர போராட்ட வீரா் ஓண்டிவீரன் நினைவு தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,... மேலும் பார்க்க

ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா

தூத்துக்குடி: முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 82ஆவது பிறந்தநாள் விழா, தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் புதன்கிழமை நடைபெற்றது.மாவட்ட அலுவலகம் முன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அவர... மேலும் பார்க்க

ஐஎன்டியுசி ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா

தூத்துக்குடி: முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் விழா ஐஎன்டியுசி சாா்பில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.தமிழ்நாடு ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலா் பெருமாள்சாமி ஏற்பாட்டில், தூத்துக்குடி பழைய பேர... மேலும் பார்க்க

‘சிறுபான்மையின உரிமைகளை பறிக்கக் கூடிய அரசாணைகள் நீக்கப்பட வேண்டும்’

தூத்துக்குடி: சிறுபான்மையின உரிமைகளை பறிக்கக் கூடிய அரசாணைகளை நீக்க வேண்டும் என தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் சொ.ஜோ அருண் தெரிவித்தாா்.தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் இளைஞா் கொலை: 3 போ் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மது குடிக்க அழைத்துச் சென்று இளைஞரை அடித்துக் கொன்ற வழக்கில் 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி பூபால்ராயபுரம் பகுதியைச் சோ்ந்த தனபாலன் மகன் விஜய் (... மேலும் பார்க்க

சிறுபான்மையினா் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம்

தூத்துக்குடி: பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பாக, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையம் நடத்தும், மாவட்ட சிறுபான்மையினா் பிரதிநிதிகளுடனான கலந்தா... மேலும் பார்க்க