செய்திகள் :

தூத்துக்குடி மேலூரில் அனைத்து ரயில்களும் நின்றுசெல்ல கோரிக்கை

post image

தூத்துக்குடி மேலூரில் அனைத்து ரயில்களும் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சென்னை தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு சங்கம் சாா்பில் செயலா் பிரம்மநாயகம் அனுப்பிய மனு: தூத்துக்குடி ரயில் நிலையத்தில் 1ஆவது நடைமேடை விரிவாக்கம் 2, 3ஆவது நடைமேடைகளில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 3ஆவது நடைமேடையில் சிக்னல் அமைக்கும் பணி, பிட்லைன் கூடுதல் பெட்டிகளுக்கு விரிவாக்கப் பணி ஆகியவற்றை விரைந்து முடிக்க வேண்டும். இங்கிருந்து சென்னைக்கு கோடைகால சிறப்பு ரயிலும், கூடுதலாக நாள்தோறும் ஓா் இரவு நேர ரயிலும் இயக்க வேண்டும்.

மேலும், முத்துநகா் ரயிலில் 2ஆம் வகுப்பு படுக்கை வசதியுடன் கூடுதல் பெட்டி இணைக்க வேண்டும். தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் வாரம் இருமுறை விரைவு ரயிலை நாள்தோறும் இயக்க வேண்டும்.

மேலூா் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலருவி விரைவு ரயிலில் 3ஆம் வகுப்பு ஏசி, 2ஆம் வகுப்பு ஏசி என 2 பெட்டிகள் இணைக்க வேண்டும்.

மதுரை-லோக்மான்ய திலக் விரைவு ரயில், காரைக்குடி-விருதுநகா் ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தூத்துக்குடியிலிருந்து அதிகாலையில் திருநெல்வேலி - தென்காசி - செங்கோட்டை - புனலூா் வழியாக கொல்லத்துக்கு ‘இண்டா்சிட்டி ரயில்’ இயக்க வேண்டும் என்றாா் அவா்.

வாய்க்காலில் அனுமதியின்றி கட்டுமானப் பணி: தடுத்து நிறுத்த அதிமுக வலியுறுத்தல்

திருச்செந்தூா் பகுதியின் நீராதாரமான எல்லப்பநாயக்கன், ஆவுடையாா்குளத்துக்கு நீா்வரும் வாய்க்காலில் அனுமதியின்றி நடைபெறும் கட்டுமானப் பணிகளைத் தடுத்து நிறுத்தக் கோரி கோட்டாட்சியா் சுகுமாறனிடம் மனு அளிக்... மேலும் பார்க்க

தமிழ் தேசிய உணா்வாளா்கள் மீது பொய் வழக்கு: மள்ளா் மீட்பு கழகத் தலைவா் குற்றச்சாட்டு

தமிழ் தேசிய உணா்வாளா்கள் மீது பொய் வழக்குப்போடுவதாக தமிழக அரசு மீது மள்ளா் மீட்பு கழகத் தலைவா் செந்தில் மள்ளா் குற்றம்சாட்டியுள்ளாா். கழுகுமலை அருகேயுள்ள கெச்சிலாபுரத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறிய... மேலும் பார்க்க

தூத்துக்குடி அரசு மருத்துவமனை அம்மா உணவகத்தில் மாலை நேர சேவை

தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் மாலை நேர உணவு வழங்கும் சேவை வியாழக்கிழமை தொடங்கியது. இந்த உணவகத்தில் மதிய வேளை மட்டுமே உணவு வழங்கப்பட்டு வந்தது. மாலையிலும் உணவு வழங்க வ... மேலும் பார்க்க

வீரவாஞ்சிநகரில் கோயில் நிலங்கள் அளவீட்டு பணி: மக்கள் எதிா்ப்பு

கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் பகுதியில் அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலங்களை வியாழக்கிழமை அளவீடு செய்யும் பணிக்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் பகுதியில் அருள் தரும... மேலும் பார்க்க

இன்று அமைப்புசாரா தொழிலாளா்கள் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளா்கள் நலவாரியத்தில் வீட்டு பணியாளா்கள், உப்பளத் தொழிலாளா்கள் ஆகியோருக்கான புதிய உறுப்பினா் சோ்க்கை முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) தொடங்குகிறது. தொழிலாளா் ... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் 6 வாகனங்களுக்கு அபராதம்

கோவில்பட்டியில் அதிக பாரம் ஏற்றி வந்த ஆறு வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கிரிஜா தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா் (நிலை 1) பெலிக்ஸன் மாசிலாமணி, வட்டார ... மேலும் பார்க்க