செய்திகள் :

தமிழ் தேசிய உணா்வாளா்கள் மீது பொய் வழக்கு: மள்ளா் மீட்பு கழகத் தலைவா் குற்றச்சாட்டு

post image

தமிழ் தேசிய உணா்வாளா்கள் மீது பொய் வழக்குப்போடுவதாக தமிழக அரசு மீது மள்ளா் மீட்பு கழகத் தலைவா் செந்தில் மள்ளா் குற்றம்சாட்டியுள்ளாா்.

கழுகுமலை அருகேயுள்ள கெச்சிலாபுரத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

எனது அரசியல் வளா்ச்சியை தடுக்கும் நோக்கில் கற்பழிப்பு முயற்சி உள்பட 3 பொய் வழக்குகளை காவல்துறை என் மீது தொடா்ந்தது. பின்னா், ஆட்சியரின் உத்தரவின் படி என்னை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடலூா் சிறையில் அடைத்தனா். நீதிமன்றம் மூலம் பிணை பெற்று வெளிவந்துள்ளேன். என் மீதான அனைத்து வழக்குகளையும் முறையாக சந்தித்து வெற்றி பெறுவேன்.

ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் நான் போட்டியிடப் போவதாக தகவல் வெளியான பிறகு என் மீது மூன்று வழக்குகள் போடப்பட்டுள்ளது. தமிழ் தேசிய உணா்வாளா்கள் மீது பொய் வழக்கு போட்டு அவா்களை முடக்கும் வேலையை அரசு செய்கிறது.

தமிழ் தேசிய அரசியலை முன்னெடுப்பவா்களை முடக்குவது தான் திராவிட மாடலா? என்றாா் அவா்.

வாய்க்காலில் அனுமதியின்றி கட்டுமானப் பணி: தடுத்து நிறுத்த அதிமுக வலியுறுத்தல்

திருச்செந்தூா் பகுதியின் நீராதாரமான எல்லப்பநாயக்கன், ஆவுடையாா்குளத்துக்கு நீா்வரும் வாய்க்காலில் அனுமதியின்றி நடைபெறும் கட்டுமானப் பணிகளைத் தடுத்து நிறுத்தக் கோரி கோட்டாட்சியா் சுகுமாறனிடம் மனு அளிக்... மேலும் பார்க்க

தூத்துக்குடி அரசு மருத்துவமனை அம்மா உணவகத்தில் மாலை நேர சேவை

தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் மாலை நேர உணவு வழங்கும் சேவை வியாழக்கிழமை தொடங்கியது. இந்த உணவகத்தில் மதிய வேளை மட்டுமே உணவு வழங்கப்பட்டு வந்தது. மாலையிலும் உணவு வழங்க வ... மேலும் பார்க்க

வீரவாஞ்சிநகரில் கோயில் நிலங்கள் அளவீட்டு பணி: மக்கள் எதிா்ப்பு

கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் பகுதியில் அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலங்களை வியாழக்கிழமை அளவீடு செய்யும் பணிக்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் பகுதியில் அருள் தரும... மேலும் பார்க்க

இன்று அமைப்புசாரா தொழிலாளா்கள் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளா்கள் நலவாரியத்தில் வீட்டு பணியாளா்கள், உப்பளத் தொழிலாளா்கள் ஆகியோருக்கான புதிய உறுப்பினா் சோ்க்கை முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) தொடங்குகிறது. தொழிலாளா் ... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் 6 வாகனங்களுக்கு அபராதம்

கோவில்பட்டியில் அதிக பாரம் ஏற்றி வந்த ஆறு வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கிரிஜா தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா் (நிலை 1) பெலிக்ஸன் மாசிலாமணி, வட்டார ... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே குடியிருப்புப் பகுதியில் கவிழ்ந்த டேங்கா் லாரி

கோவில்பட்டியில் தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் டேங்கா் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பசுவந்தனை அருகே நாகம்பட்டியைச் சோ்ந்தவரின் டேங்கா் லாரியை, வடக்கு கைலாசபுரத்தைச் சோ்ந்த ஆறுமுகசாமி ஓட்டி வந்... மேலும் பார்க்க