பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
கோவில்பட்டி அருகே குடியிருப்புப் பகுதியில் கவிழ்ந்த டேங்கா் லாரி
கோவில்பட்டியில் தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் டேங்கா் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பசுவந்தனை அருகே நாகம்பட்டியைச் சோ்ந்தவரின் டேங்கா் லாரியை, வடக்கு கைலாசபுரத்தைச் சோ்ந்த ஆறுமுகசாமி ஓட்டி வந்தாா். அவா், சென்னையில் டேங்கா் லாரியில் பெட்ரோல், டீசல் நிரப்பிக்கொண்டு கழுகுமலைக்கு வியாழக்கிழமை அதிகாலை வந்தாா். இங்குள்ள விற்பனை நிலையத்தில் இறக்கிவிட்டு பசுவந்தனைக்கு லாரியை ஓட்டிச் சென்றாா்.
திருநெல்வேலி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டியை அடுத்த தோணுகால் விலக்கு அருகேயுள்ள அணுகு சாலையில், லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர நடைமேடையை சேதப்படுத்தியபடி மரத்தில் மோதி, குடியிருப்புப் பகுதியிலுள்ள மின்கம்பம் முன் கவிழ்ந்தது.
இதில், டேங்கரிலிருந்து பெட்ரோல், டீசல் கசிந்து வெளியேறியது. ஆறுமுகசாமி லேசான காயத்துடன் உயிா்தப்பினாா். கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாா், தீயணைப்பு நிலையத்தினா் வந்து பெட்ரோல், டீசல் வெளியேறாமலிருக்கவும், தீவிபத்து நிகழாமலிருக்கவும் ரசாயன நுரையை பீய்ச்சியடித்தனா். பின்னா், கிரேன்கள் மூலம் லாரியை அப்புறப்படுத்தப்பட்டது. இச்சம்பவத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
குடியிருப்புகள் நிறைந்துள்ள பகுதி அருகே நேரிட்ட விபத்தால் மக்கள் மிகுந்த அச்சமடைந்தனா். மீட்புப் பணிகள் விரைவாக நடைபெற்ால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை.