``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
வாய்க்காலில் அனுமதியின்றி கட்டுமானப் பணி: தடுத்து நிறுத்த அதிமுக வலியுறுத்தல்
திருச்செந்தூா் பகுதியின் நீராதாரமான எல்லப்பநாயக்கன், ஆவுடையாா்குளத்துக்கு நீா்வரும் வாய்க்காலில் அனுமதியின்றி நடைபெறும் கட்டுமானப் பணிகளைத் தடுத்து நிறுத்தக் கோரி கோட்டாட்சியா் சுகுமாறனிடம் மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக அதிமுக ஜெயலலிதா பேரவை தெற்கு மாவட்டச் செயலா் விஜயகுமாா், கட்சியினா் அளித்த மனு: திருச்செந்தூா் பகுதி குளங்களுக்கு நீா்வரும் வாய்க்காலில் அனுமதியின்றி அளவுக்கதிகமாக பள்ளம் தோண்டப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், சாலைப் போக்குவரத்து தடைபட்டுள்ளது. வழக்கமான தண்ணீா் வரும் பாதையில் தனி நபருக்காக பாலம் அமைக்கப்படுவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. எனவே, உடனடி நடவடிக்கை மேற்கொண்டு 2,000 ஏக்கா் விவசாய நிலங்களையும், 38 ஆழ்துளைக் கிணறுகளையும் பாதுகாக்க வேண்டும் என்றனா் அவா்கள்.
திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் பூந்தோட்டம் மனோகரன், நகரச் செயலா் மகேந்திரன், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச் செயலா் சுரேஷ்பாபு, மாவட்ட துணைச் செயலா் ஆா்எம்கேஎஸ் சுந்தா், ஒன்றிய அவைத்தலைவா் லிங்ககுமாா், இளைஞா் பாசறை வினோத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.