``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
வீரவாஞ்சிநகரில் கோயில் நிலங்கள் அளவீட்டு பணி: மக்கள் எதிா்ப்பு
கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் பகுதியில் அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலங்களை வியாழக்கிழமை அளவீடு செய்யும் பணிக்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் பகுதியில் அருள் தரும்
செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாதசாமி கோயிலுடன் இணைந்த அருள்மிகு சொா்ணமலை கதிரேசன் திருக்கோயிலுக்கு சொந்தமாக 129 ஏக்கா் 35 சென்ட் நிலம் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலத்தை வியாழக்கிழமை முதல் 14ஆம் தேதிக்குள் அளவீடு செய்ய, தனி வட்டாட்சியா்(ஆலய நிலங்கள்) பிரபாகரன் தலைமையில் இந்து சமய அறநிலைத்துறை கோயில் செயல் அலுவலா்கள், ஆய்வாளா்கள் மற்றும் அலுவலக ஊழியா்கள் வியாழக்கிழமை வந்தனா்.
அப்போது, அப்பகுதி மக்கள் அவா்களைத் தடுத்து அளவீடு செய்யக்கூடாது என எதிா்ப்புத் தெரிவித்தனராம்.அவா்களிடம் மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் வேல் பாண்டியன் தலைமையில் போலீஸாா் மற்றும் நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி பேச்சு நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதால் அளவீடு செய்யும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
அந்த இடத்தில் குடியிருப்பவா்கள் பட்டா கோரும் நிலையில், அது இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இடம் என தெரிய வந்ததால் மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனா்.