பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
இன்று அமைப்புசாரா தொழிலாளா்கள் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளா்கள் நலவாரியத்தில் வீட்டு பணியாளா்கள், உப்பளத் தொழிலாளா்கள் ஆகியோருக்கான புதிய உறுப்பினா் சோ்க்கை முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) தொடங்குகிறது.
தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் கீழ் தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளா்கள் நலவாரியம் உட்பட 18 வகையான நலவாரியங்கள் செயல்பட்டுவருகின்றன. இதில், தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா் நலவாரியத்தில் ட்ற்ற்ல்ள்://ற்ய்ன்ஜ்ஜ்க்ஷ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பித்து உறுப்பினராக பதிவு செய்யலாம். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உறுப்பினா் பதிவினை புதுப்பிக்க வேண்டும் .
இதற்காக, ஜூன் 13இல் முள்ளக்காடு பகுதி, 18இல் எம்ஜிஆா் நகா் 23இல் காயல்பட்டினம், 26இல் லெவிஞ்சிபுரம், ஜூலை 1இல் ஆறுமுகனேரி, 6இல் தாளமுத்துநகா் ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெறுகிறது.
உப்பளத் தொழிலாளா்கள், வீட்டு பணியாளா்கள் தொழிலாளா்கள் பள்ளிச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநா் உரிமம், வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றில் ஒன்று, குடும்ப அட்டை, வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்கம், ஆதாா் அட்டை ( அலைபேசி எண் இணைப்புடன்) புகைப்படம் 1, பதினெட்டு வயது பூா்த்தியடைந்த அல்லது பூா்த்தியடையாதவரெனில் பாதுகாவலா் உடன் சென்று நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு 0461-2341110 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தூத்துக்குடி சமூகப் பாதுகாப்புத் திட்ட தொழிலாளா் உதவி ஆணையா் கே.எஸ்.ஆனந்த் பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.