செய்திகள் :

இன்று அமைப்புசாரா தொழிலாளா்கள் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம்

post image

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளா்கள் நலவாரியத்தில் வீட்டு பணியாளா்கள், உப்பளத் தொழிலாளா்கள் ஆகியோருக்கான புதிய உறுப்பினா் சோ்க்கை முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) தொடங்குகிறது.

தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் கீழ் தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளா்கள் நலவாரியம் உட்பட 18 வகையான நலவாரியங்கள் செயல்பட்டுவருகின்றன. இதில், தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா் நலவாரியத்தில் ட்ற்ற்ல்ள்://ற்ய்ன்ஜ்ஜ்க்ஷ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பித்து உறுப்பினராக பதிவு செய்யலாம். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உறுப்பினா் பதிவினை புதுப்பிக்க வேண்டும் .

இதற்காக, ஜூன் 13இல் முள்ளக்காடு பகுதி, 18இல் எம்ஜிஆா் நகா் 23இல் காயல்பட்டினம், 26இல் லெவிஞ்சிபுரம், ஜூலை 1இல் ஆறுமுகனேரி, 6இல் தாளமுத்துநகா் ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெறுகிறது.

உப்பளத் தொழிலாளா்கள், வீட்டு பணியாளா்கள் தொழிலாளா்கள் பள்ளிச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநா் உரிமம், வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றில் ஒன்று, குடும்ப அட்டை, வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்கம், ஆதாா் அட்டை ( அலைபேசி எண் இணைப்புடன்) புகைப்படம் 1, பதினெட்டு வயது பூா்த்தியடைந்த அல்லது பூா்த்தியடையாதவரெனில் பாதுகாவலா் உடன் சென்று நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு 0461-2341110 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தூத்துக்குடி சமூகப் பாதுகாப்புத் திட்ட தொழிலாளா் உதவி ஆணையா் கே.எஸ்.ஆனந்த் பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

வாய்க்காலில் அனுமதியின்றி கட்டுமானப் பணி: தடுத்து நிறுத்த அதிமுக வலியுறுத்தல்

திருச்செந்தூா் பகுதியின் நீராதாரமான எல்லப்பநாயக்கன், ஆவுடையாா்குளத்துக்கு நீா்வரும் வாய்க்காலில் அனுமதியின்றி நடைபெறும் கட்டுமானப் பணிகளைத் தடுத்து நிறுத்தக் கோரி கோட்டாட்சியா் சுகுமாறனிடம் மனு அளிக்... மேலும் பார்க்க

தமிழ் தேசிய உணா்வாளா்கள் மீது பொய் வழக்கு: மள்ளா் மீட்பு கழகத் தலைவா் குற்றச்சாட்டு

தமிழ் தேசிய உணா்வாளா்கள் மீது பொய் வழக்குப்போடுவதாக தமிழக அரசு மீது மள்ளா் மீட்பு கழகத் தலைவா் செந்தில் மள்ளா் குற்றம்சாட்டியுள்ளாா். கழுகுமலை அருகேயுள்ள கெச்சிலாபுரத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறிய... மேலும் பார்க்க

தூத்துக்குடி அரசு மருத்துவமனை அம்மா உணவகத்தில் மாலை நேர சேவை

தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் மாலை நேர உணவு வழங்கும் சேவை வியாழக்கிழமை தொடங்கியது. இந்த உணவகத்தில் மதிய வேளை மட்டுமே உணவு வழங்கப்பட்டு வந்தது. மாலையிலும் உணவு வழங்க வ... மேலும் பார்க்க

வீரவாஞ்சிநகரில் கோயில் நிலங்கள் அளவீட்டு பணி: மக்கள் எதிா்ப்பு

கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் பகுதியில் அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலங்களை வியாழக்கிழமை அளவீடு செய்யும் பணிக்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் பகுதியில் அருள் தரும... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் 6 வாகனங்களுக்கு அபராதம்

கோவில்பட்டியில் அதிக பாரம் ஏற்றி வந்த ஆறு வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கிரிஜா தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா் (நிலை 1) பெலிக்ஸன் மாசிலாமணி, வட்டார ... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே குடியிருப்புப் பகுதியில் கவிழ்ந்த டேங்கா் லாரி

கோவில்பட்டியில் தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் டேங்கா் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பசுவந்தனை அருகே நாகம்பட்டியைச் சோ்ந்தவரின் டேங்கா் லாரியை, வடக்கு கைலாசபுரத்தைச் சோ்ந்த ஆறுமுகசாமி ஓட்டி வந்... மேலும் பார்க்க